மக்கள் பிரச்சனைகளை அதிகாரிகளிடம் எடுத்துச் செல்ல வேண்டும்.. தஞ்சை தெற்கு மாவட்ட ஆலோசனை கூட்டத்தில்பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பேச்சு..

மனிதநேய ஜனநாயக கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட ஆலோசனை கூட்டம் அதிராம்பட்டின நகர அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் அதிரை.ஷேக் தலைமையில் நடைபெற்றது.

இதில் மாவட்டத்தின் மேலிட பொறுப்பாளரும், மாநில செயலாளருமான நாச்சிகுளம். தாஜூதீன் முன்னிலை வகித்து, நிர்வாக பணிகள் குறித்து விவாதித்தார்.

இதில் பங்கேற்ற பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் புதிய கிளைகளை கட்டமைப்பது குறித்தும், வளர்ச்சி திட்டங்கள் குறித்தும் ஆலோசனைகளை வழங்கினார்.

பகுதிவாரியாக மக்கள் பிரச்சனைகளை கண்டறிந்து அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று தீர்வு காண வேண்டும் என்றும், சமூக நல்லிணக்கத்தை வலிமை படுத்தும் பன்முக அரசியலை வளர்த்தெடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

பிறகு நிரப்பப்படாத பொறுப்புகளை பூர்த்தி செய்வது குறித்தும், செயல்படும் புதியவர்களுக்கு வாய்ப்புகளை வழங்குவது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் பஷீர், மாவட்ட துணை செயலாளர் சாகுல், ஜெகபர் உள்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#தஞ்சை_தெற்கு_மாவட்டம்.