புதுக்கோட்டையில் மஜக இல்ல திருமணம்..!மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்பு!

மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணைச் செயலாளர் துரை முகம்மது அவர்களின் மகள் தியானா அவர்களுக்கும், மணமகன் முகம்மது பாசில் அவர்களுக்கும் இன்று புதுக்கோட்டையில் திருமணம் நடைபெற்றது.

இதில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்று மணமக்களை வாழ்த்தி பேசினார்.

கொரோனா கட்டுப்பாடுகளுக்கேற்ப திருமணத்தை நடத்தியதற்காக மாநில துணைச் செயலாளர் துரை முகம்மதுவை பாராட்டினார்.

முன்னதாக பத்திரிக்கையாளர் சந்திப்பும் நடைபெற்றது .

அதில் தொலைபேசி ஒட்டுக் கேட்பு விவகாரம், தமிழக அரசின் செயல்பாடுகள், மேகதாது அணை விவகாரம் ஆகியன குறித்த கேள்விகளுக்கும் பொதுச் செயலாளர் பதிலளித்தார்.

இந்நிகழ்வுகளில் மாநிலச் செயலாளர் நாச்சிக்குளம். தாஜ்தீன், புதுக்கோட்டை மேற்கு மாவட்ட செயலாளர் ஜான் முகம்மது, பொருளாளர் ரஹீம் தாலிப், கிழக்கு மாவட்ட செயலாளர் முபாரக் உள்ளிட்ட கட்சியினரும் பங்கேற்றனர்.

இரண்டு மாவட்ட நிர்வாகிகளிடமும் பேசிய பொதுச் செயலாளர் அவர்கள் கட்சிப் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

விரைவில் மாவட்ட பொதுக் குழுக்களை நடத்துமாறும், மக்கள் நலன் சார்ந்த போராட்டங்களை முன்னெடுக்குமாறும் கேட்டுக் கொண்டார்.

மேலும் உறுப்பினர் அட்டைகள் தயாராகி வருவதால், ஒரு மாதத்திற்குள் மாவட்ட வாரியாக அது வினியோகிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#புதுக்கோட்டை_மேற்கு_மாவட்டம்
25.07.2021