மஜக முயற்சியில் குடியாத்தம் MBS-நகர் பகுதியில் புதிய தண்ணீர் தொட்டி

image

image

வேலூர்.ஆக.14: வேலூர் (மே) மாவட்டம் குடியாத்தம் நகர  மனிதநேய ஜனநாயக கட்சியின் முயற்சியால்  குடியாத்தம் நகராட்சி  8- வார்டு MBS நகரில் பழைய தண்ணீர் தொட்டி அகற்றி புதிய தண்ணீர் வைக்கப்பட்டது மற்றும் தேங்கி கிடக்கும் கழிவுநீர் தேக்கங்களில் டெங்கு மற்றும் மலேரியா நோய்கள் பரவாமல் தடுக்க எண்ணெய் பந்துகள் போடப்பட்டன.

பின்பு MBS-நகர் 8- வது வார்டு சுற்றி உள்ள பகுதிகளில் கால்வாய்கள் அமைக்க சுற்றி உள்ள பகுதிகளில்  இந்த சுகாதார பணியை நகராட்சி ஆணையர் #சங்கர் அவர்கள் நேரில் ஆய்வு செய்தார்.

களத்தில் மஜக நகர செயலாளர் S.அனீஸ், நகர பொருளாளர் முபாரக் அஹமத், நகர து.செயலாளர் சலீம், கிளை நிர்வாகிகள் அல்தாப், கபீர், அலீம் ஆகியோர் உடன் இருந்தனர்.

#மனிதநேய_ஜனநாயக_கட்சியின் கோரிக்கையை ஏற்று உடனடியாக நடவடிக்கை எடுத்த குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினருக்கும் மற்றும்  நகராட்சி ஆணையருக்கும் மற்றும் நகராட்சி உதவி அதிகாரிகளுக்கும், துப்புரவு பணியாளர்களுக்கும் நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில் நுட்ப_அணி
#MJK_IT_WING
வேலூர் மே  மாவட்டம்,
குடியாத்தம் நகரம்
14.08.2017