CPM அலுவலகம் தாக்கப்பட்டது மதவெறியின் தொடர்ச்சி! மஜக கண்டனம்…

(மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் வெளியிடும் கண்டன அறிக்கை)

கோவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தின் மீது நடைபெற்ற தாக்குதல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

வகுப்புவாத சக்திகளுக்கு எதிராக வலிமையான எதிர்ப்பை தொடர்ந்து முன்னெடுத்து வரும் CPM கட்சியின் நடவடிக்கைகளை பொறுக்க முடியாத மதவெறி சக்திகள், தங்களது வழக்கமான வன்முறையை கையில் எடுத்துள்ளனர்.

இத்தாக்குதல் தொடர்பான குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய காவல்துறை துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் அரசியல் வன்முறைகள் பெருக இடம் அளிக்க கூடாது. இவ்விஷயத்தில் தமிழக மக்கள் உறுதியான மனநிலையில் இருப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இவண்,

M.தமிமுன் அன்சாரி MLA,
பொதுச்செயலாளர்,
மனிதநேய ஜனநாயக கட்சி.
18/06/2017

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.