மனிதநேயம் காப்போம்! புதுக்கோட்டை மேற்கு மாவட்ட பொதுக்குழுவில் மஜக மாநில பொருளாளர் ஹாரூன் ரசீது பேச்சு!

மனிதநேய ஜனநாயக கட்சியின் புதுக்கோட்டை மேற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் கறம்பக்குடியில் மாவட்ட செயலாளர் முஹம்மது ஜான், அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது, தலைமை ஒருங்கிணைப்பாளர் மெளலா நாசர், ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர்.

இதில் பேசிய மாநில பொருளாளர் மஜக வின் பணிகள் மற்றும் கடந்து வந்த பாதை களை சுட்டிக்காட்டி மஜக வினர் உயிர் தியாகத்திலும் மனிதநேயம் மற்றும் ஜனநாயகம் காப்பவர்கள் என்று பேசினார்.

அதை தொடர்ந்து தலைமை ஒருங்கிணைப்பாளர் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்து நிர்வாகிகள் மத்தியில் உரையாற்றினார்.

மேலும் மாநில துணைச்செயலாளர் துரை முஹம்மது, விவசாய அணி மாநில செயலாளர் பேரை அப்துல் சலாம், ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

முன்னதாக நிகழ்ச்சியை தலைமை ஒருங்கிணைப்பாளர் மௌலா நாசர், கொடி ஏற்றி துவக்கி வைத்தார்கள்.

இதில் புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட செயலாளர் முனைவர் முபாரக் அலி, விவசாய அணி மாநில துணை செயலாளர் ஷேக் இஸ்மாயில், தலைமை செயற்குழு உறுப்பினர் அஜ்மீர் அலி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.

முன்னதாக மாவட்ட துணைச்செயலாளர் லெட்சுமணன் அவர்கள் வரவேற்புரை நிழ்த்தினார்.

மக்கள் நலன் சார்ந்த 14, தீர்மானங்களை மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் வாசித்தனர், சமீபத்தில் சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்ட மஜக முன்னாள் மாநில துணைச்செயலாளர் வசீம் அக்ரம், அவர்களுக்கு இரண்டு நிமிடம் எழுந்து நின்று மெளனம் செலுத்தப்பட்டது, மேலும் அவரது குடும்பத்திற்கு குடும்ப நல நிதியாக கறம்பக்குடி நகர கிளையின் சார்பாக நகர செயலாளர் ஆசை அப்துல்லா, தலைமையில் நகர நிர்வாகிகள் ₹10,555/- ரூபாய் வழங்கினர்.

இக்கூட்டத்தில் மஜக வின் மகளிர் அணி நிர்வாகிகள் மத்தியில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மஜக மாவட்ட, ஒன்றிய, நகர, நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உட்பட திரளானோர் பங்கேற்றனர்.

நிழ்ச்சியின் இறுதியில் கறம்பக்குடி ஒன்றிய செயலாளர் முஹம்மது அப்துல்லா, அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.

தகவல் ;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#புதுக்கோட்டை_மேற்கு_மாவட்டம்
02.10.2021