மஜக கொள்கை விளக்க அணி மாநிலச்செயலாளர் கோவை நாசர் மரணம்… மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி இரங்கல்!

மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில கொள்கை விளக்க அணி செயலாளர் அண்ணன் கோவை .நாசர் அவர்கள் இன்று காலை மரணம் அடைந்தார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறோம்.

சமீபத்தில் உடல் நலிவுற்ற நிலையில் அவரை வீட்டில் சந்தித்தப் போது, மிகுந்த உற்சாகத்துடன் கட்சி பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

அவர் கோவை மாநகராட்சியின் கவுன்சிலராக இருந்த போது எளிமையான அணுகுமுறைகள் காரணமாக அனைவராலும் பாராட்டப் பெற்றார்.

மஜக தொடங்கப்பட்ட பிறகு தன்னை கட்சியில் இணைத்துக் கொண்டு பேரார்வத்துடன் பரப்புரையில் ஈடுபட்டு கட்சி வளர்ச்சியில் அக்கறை காட்டினார்.

அதுவே அவரை கட்சியின் கொள்கை விளக்க அணியின் மாநில செயலாளராக உயர்த்தியது.

மேடைகளில் கலகலப்பாக பேசி மக்களை ஈர்ப்பதில் கெட்டிக்காரராக வலம் வந்தார்.

சிரித்த முகத்துடன் அனைவருடனும் பழகிடும் அவரது இழப்பு மிகுந்த வேதனையளிக்கிறது.

அன்பு மிகுந்த ஒரு மூத்த சகோதரரை நாங்கள் இழந்திருக்கிறோம். அந்த வருத்தம் வாட்டுகிறது.

அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், கட்சியினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம்.

இறைவன் அவரது பிழைகளை மன்னித்து மறு உலக வாழ்வில் அவரை சிறப்பித்திட பிரார்த்திக்கிறோம்.

இவண்,

மு.தமிமுன் அன்சாரி,
பொதுச்செயலாளர்,
#மனிதநேய_ஜனநாயக_கட்சி.
03.09.2021