திருவாரூர் அத்திக்கடையில் மஜகவில் இணைந்த சமூக ஆர்வலர்கள்!


அக்.12,
மனிதநேய ஜனநாயக கட்சியின் சேவை அரசியலால் ஈர்க்கப்பட்டு பல்வேறு தரப்பினர் கட்சியில் இணையும் நிகழ்வு தமிழகமெங்கும் தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது.

அதன் தொடர்ச்சியாக திருவாரூர் மாவட்டம் அத்திக்கடை பாலாக்குடியில் ஆதரத்தார். முஹம்மது ஹுசைன் தலைமையிலும் கத்தார் MKP நிர்வாகி செய்யது அபூதாஹிர் முன்னிலையிலும் மஜக கூட்டம் நடைப்பெற்றது.

அதில் மாவட்டச் செயலாளர் PMA சீனி ஜெகபர் சாதிக் முன்னிலையில், பட்டக்கால் குத்துபுதீன், செல்லராஜா @ சாகுல் ஹமீது, நிஜாம்தீன், முகம்மது சாதிக், முகம்மது ரிஸ்வான் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் தங்களை மஜகவில் தன்னெழுச்சியாக இணைத்து கொண்டனர்.

இந்நிகழ்வில் பொதக்குடி ஆசிக், கூத்தாநல்லூர் நூருல் அமீன், J.சாகிது ஃபைசல், K.A அப்துல் காதர்,
K.D சாகுல் ஹமீது, ஜெகபர் சாதிக் ஆகியோர் உடனிருந்தனர்.

தகவல்,

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#திருவாரூர்_மாவட்டம்.
11/10/2020