கோவையில் 75வது சுதந்திர தின விழாகொண்டாட்டம்! மஜக சார்பில் தேசிய கொடியேற்றி இனிப்புகள் வழங்கினர்!

இந்திய தேசத்தின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவை மாநகர் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் தேசிய கொடியேற்று விழா மாவட்ட துணைச் செயலாளர் ATR.பதுருதீன், அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதில் தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் கோவை சம்சுதீன், வணிகர் சங்க மாவட்ட பொறுப்பாளர்கள் நவ்ஃபல் பாபு, ஹாருண், இளைஞரணி மாவட்ட துணைச் செயலாளர் பைசல் ரகுமான், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் இப்ராஹிம் சேட்டு, மத்திய பகுதி பொறுப்பாளர் ஹனிபா, ஆகியோர் கலந்து கொண்டு உக்கடம், பெரியகடைவீதி, குறிச்சி பிரிவு, குனியமுத்தூர், சுகுணாபுரம், செல்வபுரம், ஆகிய பகுதிகளில் தேசிய கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.

இந்நிகழ்வுகளில் கிணத்துக்கடவு, தெற்கு பகுதி, நிர்வாகிகள், மற்றும் குனியமுத்தூர், சுகுணாபுரம், செல்வபுரம், கிளை நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.

தகவல்

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#கோவை_மாநகர்_மாட்டம்
15.08.2021