75வது சுதந்திர தினவிழா.! மஜக செங்கல்பட்டு வடக்கு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சுதந்திரதின விழா நிகழ்ச்சிகள்..! மாநில துணைச்செயலாளர் பல்லாவரம் ஷஃபி பங்கேற்பு.!

இந்தியாவின் 75-வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது, மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக தமிழகம் முழுவதும் சுதந்திரதின விழா நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு நிகழ்வாக செங்கல்பட்டு வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட தாம்பரம், பல்லாவரம், அனகாபுத்தூர், கண்டோன்மெண்ட் ஆகிய பகுதிகளில் சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

தாம்பரம் மற்றும் கண்டோன்மெண்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மஜக மாநில துணை செயலாளரும், மாவட்ட பொறுப்பாளருமான பல்லாவரம் ஷஃபி அவர்களும், அனகையில் மாவட்ட செயலாளர் ஜாகிர் உசேன் அவர்களும், பல்லாவரத்தில் மாவட்ட பொருளாளர் தில்சாத் அவர்களும் தேசியக் கொடியை ஏற்றி வைத்தனர்.

நிறைவாக அனைவருக்கும் இனிப்புகள் மற்றும் மாணவ மாணவியர்களுக்கு நோட்டுப் புத்தகங்களும் வழங்கப்பட்டது.

சமூக இடைவெளியுடன் நடைபெற்ற இந்நிகழ்வுகளில் மாவட்ட துணைச் செயலாளர்கள் ECR அப்துல் சமது, பல்லாவரம் அஜீஸ், கண்டோன்மெண்ட் அப்துல் சமது, MJTS மாவட்ட செயலாளர் பிராங்கிளின் உள்ளிட்ட மாவட்ட, பகுதி, கிளை நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#செங்கை_வடக்கு
15.08.2021