பொதக்குடியில் மஜக சார்பில் 75வது சுதந்திர தின விழா!

திருவாரூர் மாவட்டம், பொதக்குடியில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி மஜக அலுவலகத்தில் நடைபெற்றது.

பொதக்குடி ஊர் உறவின் முறை ஜமாத் அறப்பணி சங்க தலைவர் மஹதூம் மைதீன் அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

இந்நிகழ்வில், T.M.S.அப்துல் கரீம் அவர்கள் முன்னிலையில் மேலப்பள்ளிவாசல் முத்தவல்லி ஹாஜி.லியாகத் அலி, மஜக தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெய்னுதீன், மாவட்ட துணை செயலாளர் நத்தர் கனி, கிளை நிர்வாகிகள் முனவர் ஹசன், ஜலாலுதீன், ராசித் இலாஹி, ஹபீப் ரஹ்மான், முஹம்மது ஜாவித், முஹம்மது தாஹிர் உள்பட ஜமாத்தார்களும், பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர்.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#திருவாரூர்_மாவட்டம்.