சிகிச்சை பெறும் மீனவர் கலைச்செல்வன்! மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி நேரில் ஆறுதல்!

கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன் பிடித்துக் கொண்டிருந்த நாகை அக்கரைப்பேட்டையை சார்ந்த மீனவர் கலைச்செல்வன், (வயது 33) இலங்கை கடற்படையினரால் நடத்திய துப்பாக்கிச்சூட்டால் காயமடைந்துள்ளார்.

தற்போது, நாகை அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெறும் மீனவர் கலைச்செல்வனை மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும், நாகை முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான மு.தமிமுன் அன்சாரி, அவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

அவரது சிகிச்சை நிலவரம் குறித்து நிலைய மருத்துவ அதிகாரி உமா மகேஸ்வரன், அவர்களிடம் கேட்டறிந்தார்

அப்போது மாவட்ட பொருளாளர் சதக்கத்துல்லா, தலைமை செயற்குழு உறுப்பினர் மன்சூர், மாவட்ட துணைச் செயலாளர் ஷேக் அகமதுல்லா, நகர செயலாளர் அஜீஸ், சம்பத் ஆகியோர் உள்ளிட்ட மஜக வினரும் உடனிருந்தனர்.

தகவல்,

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#நாகை_மாவட்டம்
04.08.2021