75வது சுதந்திர தினம்.!மஜக செங்கை தெற்கு மாவட்டம் சார்பாக மாபெரும் இரத்ததான முகாம்.! மாநில துணைச்செயலாளர் பல்லாவரம் ஷஃபி நிகழ்வை தொடங்கிவைத்தார்.!

இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக தமிழகம் முழுவதும் இன்று பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

அதன் ஒருநிகழ்வாக செங்கல்பட்டு தெற்கு மாவட்டம் சார்பாக கேளம்பாக்கம் நிழல் தன்னார்வ தொண்டு நிறுவனம்,
சென்னை அன்னை தெரசா இரத்த வங்கி இணைந்து மாபெரும் இரத்ததான முகாம் இன்று நடைபெற்றது.

கேளம்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற முகாமில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் க.வெங்கடேசன் அவர்கள் தலைமை தாங்கினார், அப்துல் ரஷீது, முகம்மது ரஃபி, அப்துல் சர்தார் சமியுல்லா, வனிதா வெங்கடேசன், தீன்பாய் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முகாமிற்கு சிறப்பு அழைப்பாளராக மஜக மாநில துணைச் செயலாளரும், செங்கை தெற்கு மாவட்ட பொறுப்பாளருமான பல்லாவரம் ஷஃபி அவர்கள் கலந்துகொண்டு முகாமை தொடங்கி வைத்து அனைவருக்கும் முன்மாதிரியாக அவரும் இரத்ததானம் செய்தார்.

முகாமில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் முகமது யூசுப், ரஹ்மத்துல்லாஹ், செங்கை வடக்கு மாவட்ட செயலாளர் ஜாகீர், பொருளாளர் தில்ஷாத் அன்சாரி, இனாயத்துல்லா மற்றும் கானத்தூர் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர் இறுதியாக நைனா முகமது நன்றியுரை கூறினார்.

முகாமில் இரத்த தானம் செய்த அனைவருக்கும் பாரட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#செங்கை_தெற்கு
15.08.2021