கோணுழாம்பள்ளத்தில் மஜக சார்பில் 75வது சுதந்திர தின விழா!

75வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக கோணுழாம்பள்ளத்தில், தேசிய கொடி ஏற்றப்பட்டது.

கோணுழாம்பள்ளம் நவாஸ்தீன் (ராஜா) தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் இக்பால் சேட் கலந்து கொண்டு தேசிய கொடியினை ஏற்றி வைத்தார்.

மாநில கொள்கை விளக்க அணி துணை செயலாளர் காதர் பாட்சா உறுதி மொழியை முழங்கினார். தொடர்ந்து மரக்கன்றுகள் நடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட பொருளாளர் குடந்தை நிஜாம், துணை செயலாளர் சையது இப்ராஹிம், ஒன்றிய செயலாளர் சாதிக் பாட்சா உள்பட திரளான மஜக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#தஞ்சை_வடக்கு_மாவட்டம்.