You are here

75வது சுதந்திர தின விழா! நாச்சிகுளத்தில் மஜக மாநில செயலாளர் தாஜூதீன் பங்கேற்பு!

திருவாரூர் மாவட்டம், நாச்சிகுளம் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மஜக மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன் அவர்கள் கலந்துகொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

முன்னதாக நாச்சிகுளம் ஜும்மா பள்ளி இமாம் அப்துல் காதர் அவர்கள் தேசியக் கொடியின் வரலாறு குறித்து உரை நிகழ்த்தினார்.

மஜகவின் பஹ்ரைன் மண்டல ஆலோசகர் ஜான்முகம்மது அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் ரோஜாபானு அன்வர் அலி, Ex ஊராட்சி மன்ற தலைவர் திரு.வைத்தியநாதன்,
Ex ஊராட்சிமன்ற துணை தலைவர் பக்கிரிசாமி, 8வது வார்டு உறுப்பினர் ராயல் காதர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மஜக கிளை பொறுப்பாளர் நாச்சிகுளம் ரசீது தலைமையில் கிளை துணை செயலாளர் இம்தியாஸ், சீமான், ஹாரீஸ் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#திருவாரூர்_மாவட்டம்.

Top