75வது சுதந்திர தினம்! குடியாத்ததில் மஜகவின் சுதந்திர தின விழா நிகழ்ச்சி..!

இந்தியாவின் 75-வது சுதந்திர தின விழாவையொட்டி மனிதநேய ஜனநாயக கட்சியின் வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகர அலுவலகத்தில் தேசிய கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.

எதிர்கால இந்தியாவின் தூண்கள் என்று சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் நேரு அவர்களால் பெரிதும் விரும்பப்பட்ட குழந்தைகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் எழுதுகோல் மற்றும் இனிப்புகள் வழங்கி சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.

குடியாத்தம் நகர செயலாளர் S.அனிஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்ற
இந்நிகழ்வில், மஜக முன்னால் மாநில இளைஞர் அணி பொருளாளர்
A.மன்சூர் அஹ்மத் அவர்கள் கலந்து கொண்டு கொடியேற்றி வைத்தார்.

இதில் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் முபாரக் அஹ்மத், நகர இளைஞர் அணி பொருளாளர் அல்தாப், நகர மருத்துவ அணி நிர்வாகிகள் சாதிக் பாஷா,ரஹ்மான் மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#வேலூர்_மாவட்டம்
15.08.2021

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.