மனசாட்சி நட்புக் கரங்கள் நிகழ்வு… மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்பு…!

மனசாட்சி நட்புகரங்கள் டிரஸ்ட் சார்பாக, சாலையோரங்கள், பஸ்/ ரயில் நிலையங்கள், வீதி திண்ணைகளில் வசிக்கும் ஆதரவற்றோருக்கு போர்வைகளும், குடிசை வீடுகளில் வசிக்கும் நலிவடைந்தோருக்கு தார்ப்பாய்களும் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை வழங்கப்பட்டு வருகிறது.

இவ்வாண்டுக்கான சேவை இன்று நாகை மாவட்டம் தோப்புத்துறையில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி Ex.MLA அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.

ஆதரவற்ற, வசதியில்லாதவர்களுக்கு தார்பாய்கள் மற்றும் போர்வைகளை நேரடியாக சென்று வழங்கும் திட்டத்தின் சேவையினை திருமிகு. மு.தமிமுன் அன்சாரி அவர்கள் தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு போர்வைகளும், தார்பாய்களும் வழங்கினார்.

அதேபோல், உடல் உறுப்பு தானத்தை, செம்போடை நேதாஜி மருத்துவமனையின் நிறுவனர், மருத்துவர் V.G.சுப்ரமணியன் MBBS, MD அவர்கள் தொடங்கி வைத்தார்..

முதல் உடல் உறுப்பு தானத்தை, நாலுவேதபதி K.ராஜேந்திரன் அவர்கள் வழங்கி, துவக்க விழா சான்றிதழை பெற்றுக் கொண்டார்..

மனசாட்சி நட்புகரங்கள் அறக்கட்டளையின் நிறுவனர் R.சம்பத்குமார் அவர்கள், தலைமை ஒருங்கிணைப்பாளர் N.பாலமுரளி அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற இவ்விழாவில், மாநில ஒருங்கிணைப்பாளர் S.முருகையன் அவர்கள் நன்றியுரைற்றினார்.

இதில், மனிதநேய ஜனநாயக கட்சியின் நாகை மாவட்ட துணை செயலாளர் ஷேக் அஹ்மதுல்லா மற்றும் மனசாட்சி நட்புகரங்கள் டிரஸ்டின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் K.சுந்தரமூர்த்தி, P. சாக்ரடீஸ், மாநில இணை ஒருங்கிணைப்பாளர் I.கண்ணு வாப்பா, டெல்டா மண்டல ஒருங்கிணைப்பாளர் N.மணிவண்ணன், மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர்கள் L.அருள்ராஜ், M.இப்ராஹீம், K.ராஜேந்திரன், மாவட்ட செய்தி தொடர்பாளர் K.N. அன்பு, துணை ஒருங்கிணைப்பாளர் M.ராஜேந்திரன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் A.சிக்கந்தர், வேதை நகர ஒருங்கிணைப்பாளர் S.குணபாலன், பொருளாளர் G.உதயகுமார், நகர இணை ஒருங்கிணைப்பாளர்கள் R.ரவிக்குமார், S.ரவிக்குமார், விமல் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#நாகை_மாவட்டம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.