திருச்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்பு.!

மஜக சார்பு அமைப்பான மனிதநேய கலாச்சாரப் பேரவையின் பஹ்ரைன் மண்டல செயலாளர் வல்லம் ரியாஸ் அவர்களின் திருமண வரவேற்பு நிகழ்வில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். இந்நிகழ்வில் மதிமுக பிரமுகர்கள் மல்லை. சத்யா, தென்றல் நிசார், வல்லம் பஷீர் உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.

பிறகு சமீபத்தில் திருமணம் நடைப்பெற்ற திருச்சி மாவட்ட மஜக செயலாளர் பேரா.மைதீன் அவர்களின் வீட்டுக்கு சென்று மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

பிறகு ஆரிபா குழுமத் தலைவர் சுல்தான் ஆரிபின் அவர்களின் திருச்சி இல்லத்திற்கு சென்று அவரை சந்தித்து உரையாடினார்.

பிறகு திருச்சியில் புதிதாக கட்சியில் இணைந்தவர்களுடன் படம் எடுத்து கொண்டார். தொடர்ந்து திருச்சி மாவட்ட மஜக நிர்வாகிகளுடன் கட்சி பணிகள் குறித்து விரிவாக கலந்தாலோசித்தார். அடுத்து ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும் கூறிவிட்டு சென்னை புறப்பட்டார்.

தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKITWING
#திருச்சி_மாவட்டம்
11.07.2021

https://m.facebook.com/story.php?story_fbid=3573712569395159&id=700424783390633