கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை : கோவை-திருச்சி சாலை பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் மஜகவினர்!!

#உண்மையான மக்கள் பணியாளர் நீங்கள்தான் பொதுமக்கள் பாராட்டு!!

கோவை:ஏப்.14.,

மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாநகர் மாவட்டம் சார்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகிகள் வழிகாட்டுதலில் கோவை மாநகர பகுதிகளில் மக்கள் கூடும் இடங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகளை செய்து வருகின்றனர்.

அதை தொடர்ந்து கோவை திருச்சி சாலை யில் உள்ள அனைத்து அடுக்குமாடி குடியிருப்புகளில் சுமார் 200க்கும் மேற்பட்ட வீடுகளுக்கும் மற்றும் வங்கிகளிலும் சென்று மஜக வினர் கிருமி நாசினி தெளித்தனர்.

இது குறித்து அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் கூறியதாவது உண்மையான மக்கள் பணியாளர்கள் நீங்கள்தான் ஆபத்து நேரங்களில் கூட மக்கள் பணியாற்ற தங்களால் மட்டுமே இயலும் என மஜக வினரின் இப்பணியை பொதுமக்கள் பெரிதும் பாராட்டினர்.

தகவல்

#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#கோவைமாநகர்மாவட்டம்
13.04.2020