மஜக வேலூர் கிழக்கு மாவட்ட நிர்வாக குழு கூட்டம்! இளைஞர் அணி மாநில செயலாளர் பங்கேற்பு!

வேலூர்.மே.03., மனிதநேய ஜனநாயக கட்சியின் வேலூர் கிழக்கு மாவட்ட நிர்வாக குழு கூட்டம் நேற்று (02.05.2018) மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டம் மாவட்ட செயலாளர் #முஹம்மது_யாஸீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில இளைஞர் அணி செயலாளர் #S_G_அப்சர்_சையத் கலந்து கொண்டார்.

இந்நிர்வாகக் குழு கூட்டத்தில் வருங்காலத்தில் செய்ய வேண்டிய செயல் திட்டங்கள் குறித்து கிழ்கண்டவாறு முடிவெடுக்கப்பட்டது.

1. தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்துதல்.,

2. புதிய கிளைகள் உருவாக்கி அனைத்து தரப்பு பாமர மக்களுடன் உயிரோட்டமான தொடர்பில் இருத்தல்.,

3.வேலூர் கிழக்கு மாவட்டத்தில் உள்ள இது வரை நியமிக்கப்படாத புதிய நகரங்களில் நிர்வாகிகளை நியமித்தல்.,

4. நாட்டையும், சமூகத்தையும் வளமான வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்வதற்கான பெரும்பங்கு இளையோர்களிடம் உண்டு என்பதை உணர்த்தும் வகையில் மாவட்ட இளைஞர் அணி சார்பாக அரசியல் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடத்துதல்.

5. மாவட்ட இளைஞர் அணி சார்பாக, சுற்றுசூழலை பாதுகாக்க, பசுமையான மிகச் சிறந்த சூழலை உருவாக்க வேலூர் மாவட்டம் முழுவதும் மரக்கன்று நடுதல்,

6. ரமலான் மாதத்தில் வேலூர் கிழக்கு மாவட்டம் சார்பாக சிறப்பாக இஃதியார் நிகழ்ச்சி நடத்துதல்

ஆகிய செயல் திட்டங்கள் முடிவெடுக்கப்பட்டன.

இந்த கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் சையத் உசேன், இளைஞர் அணி செயலாளர் அமீன், மருத்துவ சேவை அணி செயலாளர் சையத் காதர், வர்த்தகர் அணி செயலாளர் ஷமீல், தொழிலாளர் அணி செயலாளர் ரிஸ்வான், மனிதஉரிமை அணி செயலாளர் முஹம்மத் சலீம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJK_IT_WING
#வேலூர்_கிழக்கு_மாவட்டம்.