மார்ச்.24., எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான I.N.D.I.A கூட்டணியை ஆதரிப்பதாக (19.03.2024) அன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான திரு. மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்த பின் மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அறிவித்தார். அதன் தொடர்ச்சியாக திமுக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் கும்மிடிப்பூண்டி கோவிந்தராஜ்MLA அவர்களை மஜக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் மீஞ்சூர் கமால் தலைமையிலான நிர்வாகிகள் நேரில் சந்தித்தனர். இச்சந்திப்பின் போது எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரங்கள், களப்பணிகள், ஒருங்கிணைந்த செயல் திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்நிகழ்வில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொருளாளர் சையத் அப்ரார், மாவட்ட துணைச்செயலாளர் அன்சர் பாஷா, அமீர் அப்துல் காதர், மாவட்ட இளைஞரணி செயலாளர் முஹம்மது ரஃபி மற்றும் மாவட்ட,பகுதி நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #திருவள்ளூர்_கிழக்கு_மாவட்டம் 23.03.2024.
Year:
சவூதி தம்மாம் இஃப்தார்! உலக அமைதிக்காக பிரார்த்திப்போம்! நம் நாட்டவர்களுக்கு_வாய்ப்பளிக்கும் சவூதி அரசுக்கு நன்றி! மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி பேச்சு…
மார்ச்.23., சவூதியில் வாழும் தமிழ்நாட்டவர்களிடம் உற்சாகமாக செயல்படும் தொண்டு அமைப்புகளில் சவூதி தமிழ் கலாச்சார மையம் முக்கியமான இடத்தை வகிக்கிறது. அவ்வமைப்பின் சார்பில் சவூதி அரேபியாவின் தம்மாம் நகரில் ஏற்பாடு செய்யப்பட்ட இஃப்தார் நோன்பு துறப்பு நிகழ்வில் மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்றார். சவூதியின் கிழக்குப் பகுதியான தம்மாம் வட்டாரத்தில் வசிக்கும் தமிழ்நாட்டு மக்கள் திரளாக வருகை தந்திருந்தனர். அங்கு பேசிய அவர் வளைகுடா நாடுகளுக்கும் - தமிழர்களுக்கும் இடையிலான வரலாற்று - வணிக தொடர்பு குறித்து பேசினார். இங்கு எல்லா சமூகத்தவரும் ஒன்று சேர்ந்து வந்திருப்பது குறித்து பாராட்டியவர், இதுதான் காலத்தின் தேவை என்றார். மேலும் அவர் பேசியதாவது: வானவர் ஜிப்ரயில் (அலை) அவர்கள் குரல் வடிவில் நபிகளாருக்கு அளித்த வேதம் திருக்குர்ஆன். இது எழுதப்பட்டதல்ல. குரல் வடிவில் அருளப் பெற்று பின்னர் தொகுக்கப்பட்டது. இது ஒரு மலை மீது இறக்கப்பட்டிருந்தால் அந்த மலை தூள் தூளாகியிருக்கும் என்கிறது இறை வேதம். இதில் முதல் வசனமே 'ஒதுவீராக... படைத்த உன் இறைவனின் பெயரால் ஒதுவீராக...' என கல்வியை போதிக்கிறது. அடிக்கடி அதில் வரும் வார்த்தைகளில் ஒன்று 'நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா? என்பதாகும். இந்த வேதம் மனிதர்களை சிந்திக்க தூண்டுகிறது. இந்த
தென்காசி நாடாளுமன்ற திமுக வேட்பாளர்… மஜக மாவட்ட அலுவலகம் வருகை..
மார்ச்.23., எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலின் திமுக தலைமையிலான I.N.D.I.A கூட்டணியின் தென்காசி தொகுதி வெற்றி வேட்பாளர் திருமதி. டாக்டர் ராணி ஸ்ரீ குமார் அவர்கள் போட்டியிடுகிறார். இந்நிலையில் இன்று மஜக தென்காசி மாவட்ட அலுவலகத்திற்கு வேட்பாளர் உடன் திமுக தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் வே.ஜெயபாலன் ஆகியோர் வருகை தந்து மஜக தென்காசி மாவட்ட செயலாளர் அஜ்மீர் காஜா உள்ளிட்ட நிர்வாகிகளை சந்தித்து தேர்தல் பிரச்சார பணிகள் குறித்து ஆலோசனை செய்தனர். மேலும் திமுக தலைமையிலான I.N.D.I.A கூட்டணியில் இணைந்த மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களுக்கும் நன்றி தெரிவித்தனர். இச்சந்திப்பின் தென்காசி மாவட்ட அவைத் தலைவர் முஸ்தபா, மாவட்ட பொருளாளர் செய்யது அலி, மாவட்ட துணைச்செயலாளர் சிக்கந்தர் உள்ளிட்ட மஜக சொந்தங்கள் உடன் இருந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #தென்காசி_மாவட்டம் 23.03.2024.
நாடாளுமன்ற தேர்தல் 2024… ராணிப்பேட்டையில்… அமைச்சருடன் மஜக நிர்வாகிகள் சந்திப்பு….
மார்ச்.23., எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான I.N.D.I.A கூட்டணியை ஆதரிப்பதாக (19.03.2024) அன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான திரு. மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்த பின் மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அறிவித்தார். அதன் தொடர்ச்சியாக ராணிப்பேட்டை மாவட்ட திமுக செயலாளரும், அமைச்சருமான R. காந்தி அவர்களை மஜக ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் A. அப்ரர் அஹமத் அவர்கள் தலைமையிலான நிர்வாகிகள் நேரில் சந்தித்தனர். இச்சந்திப்பின் போது எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரங்கள், களப்பணிகள், ஒருங்கிணைந்த செயல் திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #ராணிப்பேட்டை_மாவட்டம் 23.03.2024.
நாடாளுமன்ற தேர்தல் 2024… கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில்… திமுக மாவட்டச் செயலாளருடன் மஜக நிர்வாகிகள் சந்திப்பு..
மார்ச்.23., எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான I.N.D.I.A கூட்டணியை ஆதரிப்பதாக (19.03.2024) அன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான திரு. மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்த பின் மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அறிவித்தார். அதன் தொடர்ச்சியாக இன்று கிருஷ்ணகிரி மாவட்ட திமுக செயலாளரும், ஓசூர் சட்டமன்ற உறுப்பினருமான திரு Y.பிரகாஷ் MLA, மற்றும் ஓசூர் மாநகர திமுக செயலாளரும், மாநகர மேயருமான திரு S.A.சத்யா அவர்களையும் மஜக மாநில துணைச் செயலாளர் ஓசூர் நவ்ஷாத் தலைமையில் மாவட்ட செயலாளர் முஹம்மது உமர், தலைமை செயற்குழு உறுப்பினர் முஹம்மது ஆரிப் உள்ளிட்ட நிர்வாகிகள் சந்தித்தனர். இச்சந்திப்பின் போது கிருஷ்ணகிரியில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரங்கள், களப்பணிகள், ஒருங்கிணைந்த செயல் திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் மாவட்ட துணைச் செயலாளர்கள் சையத் ஜலால், ADS சர்தார், அய்யூப், மாவட்ட இளைஞரணி செயலாளர் மஹபுப் ஷரீப், வர்த்தக அணி செயலாளர் அன்சர், ஓசூர் ஒன்றிய செயலாளர் பாஷா, மாநகர செயலாளர் முகம்மது அப்சல், துணைச் செயலாளர் மகபூப் மற்றும் அன்சார் ஆகியோர் உடன் இருந்தனர்.