நாடாளுமன்ற தேர்தல் 2024… திருவள்ளூர் கிழக்கு … திமுக மாவட்ட செயலாளர்ருடன் மஜக நிர்வாகிகள் சந்திப்பு….

மார்ச்.24.,

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான I.N.D.I.A கூட்டணியை ஆதரிப்பதாக (19.03.2024) அன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான திரு. மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்த பின் மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அறிவித்தார்.

அதன் தொடர்ச்சியாக திமுக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் கும்மிடிப்பூண்டி கோவிந்தராஜ்MLA அவர்களை மஜக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் மீஞ்சூர் கமால் தலைமையிலான நிர்வாகிகள் நேரில் சந்தித்தனர்.

இச்சந்திப்பின் போது எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரங்கள், களப்பணிகள், ஒருங்கிணைந்த செயல் திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொருளாளர் சையத் அப்ரார், மாவட்ட துணைச்செயலாளர் அன்சர் பாஷா, அமீர் அப்துல் காதர், மாவட்ட இளைஞரணி செயலாளர் முஹம்மது ரஃபி மற்றும் மாவட்ட,பகுதி நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#திருவள்ளூர்_கிழக்கு_மாவட்டம்
23.03.2024.