நாடாளுமன்ற தேர்தல் 2024… பெரம்பலூர்… திமுக துணை பொதுச்செயலாளருடன் மஜக நிர்வாகிகள் சந்திப்பு…

மார்ச்.24.,

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான I.N.D.I.A கூட்டணியை ஆதரிப்பதாக (19.03.2024) அன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான திரு. மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்த பின் மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அறிவித்தார்.

அதன் தொடர்ச்சியாக திமுக துணை பொதுச் செயலாளரும், நீலகிரி பாராளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா அவர்களையும் மற்றும் திமுக மாவட்ட செயலாளர் ஜெயசீலன் மற்றும் பெரம்பலூர் தொகுதி MLA பிரபாகரன் அவர்களையும் மஜக பெரம்பலூர் மாவட்ட செயலாளர் ஒயிட் முஜிப் ரஹ்மான் மற்றும் பொருளாளர் ராஜ் மோகன், மாவட்ட துணை செயலாளர் அப்துல் ரகுமான் மற்றும் முஹம்மது ஆரிப் ஆகியோர் தலைமையிலான நிர்வாகிகள் நேரில் சந்தித்தனர்.

இச்சந்திப்பின் போது பெரம்பலூரில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரங்கள், களப்பணிகள், ஒருங்கிணைந்த செயல் திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#பெரம்பலூர்_மாவட்டம்
22.03.2024.