தென்சென்னை INDIA கூட்டணி வேட்பாளர் அறிமுக கூட்டம்… மஜக மாநில துணைச்செயலாளர் அஸாருதீன் பங்கேற்பு..

மார்ச்.24.,

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான I.N.D.I.A கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மனிதநேய ஜனநாயக கட்சி சூறாவளி தேர்தல் பரப்புரையில் ஈடுபடும் என்று தலைவர் மு.தமிமுன் அன்சாரி அறிவித்துள்ளார்கள்.

அதன்படி தென்சென்னை நாடாளுமன்ற வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களது வேட்பாளர் அறிமுக கூட்டம் சென்னை நந்தனம் YMCA மைதானத்தில் நடைபெற்றது.

கூட்டத்தில் பேசிய மாநில துணைச்செயலாளர் அஸாருதீன் தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற மனிதநேய ஜனநாயக கட்சி தீவிர பிரச்சாரம் மேற்கொள்ளும் என்று பேசினார்.

இக்கூட்டத்தில் அமைச்சர் மா.சுப்ரமணியன், துணை மேயர் மகேஷ்,சட்டமன்ற உறுப்பினர்கள் மயிலை வேலு,சோழிங்கநல்லூர் அரவிந்த் ரமேஷ், தி.நகர் கருணாநிதி, விருகம்பாக்கம் பிரபாகர ராஜா, வேளச்சேரி ஹஸன் மௌலானா, தாயகம் கவி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

மஜக மாவட்ட செயலாளர் பாலவாக்கம் காதர், மாவட்ட துணைச்செயலாளர் நாகூரான் மற்றும் மாவட்ட, பகுதி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#தென்சென்னை_மாவட்டம்
23.03.2024.