பற்றி எரிகிறது குமரி மாவட்ட கடலோர கிராமங்கள்! தமிமுன் அன்சாரி MLA மற்றும் தனியரசு MLA நேரில் ஆறுதல்!

image

image

image

குமரி. டிச.11., ஓகி புயலால் பாதிகப்பட்ட கன்னியாகுமரி மக்களை பார்த்து ஆறுதல் கூறுவதற்காக மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA, தமிழக கொங்கு இளைஞர் பேரவைத்தலைவர் உ.தனியரசு MLA ஆகியோர் வருகை தந்து கடலோர மக்களையும், மீனவ மக்களையும் இன்று சந்தித்து ஆறுதல் கூறினார்.

இரவியன் புத்ததுறை பகுதியில் அங்கு கூடியிருந்த நூற்றுக்கான மீனவ மக்களுக்கு மத்தியில் இருவரும் ஆறுதல் உரையாற்றினர். 

அதன் பிறகு நடைப்பெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில், இந்திய பிரதமரும், தமிழக முதல்வரும் இம்மாவட்டதிற்க்கு வருகை தந்து மக்களுக்கு நேரில் ஆறுதல் சொல்ல வேண்டும் என்றும், இதை ஒரு தேசிய பேரிடராக அறிவித்து உதவிகள் செய்ய வேண்டும் என்றும், மீனவர்களை தேடும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு குழு ஈடுபடுத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

அதன் பிறகு மற்றொரு கடலோர கிரமமான  வள்ளவிளைக்கு வருகை தந்து  அங்கு கதறிய மக்களை பார்த்து ஆறுதல் கூறினர்.

இந்த கடற்கரையில் இருந்துதான் நாகையை சேர்ந்த 12 மீனவர்கள்  கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர் என்பது குறிப்பிடதக்கது. அவர்களின் விபரங்களையும் மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA கேட்டறிந்தார்.

அடுத்து மார்த்தாண்டம் துறை கிராமத்துக்கு இருவரும் வருகை தந்தனர். அங்கு 1000 க்கும் மேற்பட்ட மக்கள் குழுமி இருந்தனர். அவர்களுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு, சின்னதுறை கிராமத்தில் குழுமி இருந்த 500க்கும் மேற்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.

மத்திய, மாநில உளவுத் துறை கள நிலவரங்கள் குறித்து சரியான தகவல்களை மேலிடத்திற்கு அனுப்ப வேண்டும் என்றும், பத்திரிக்கையாளர்களிடம் கூறினர். மேலும், ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 7000 ஆயிரம் பேர் மீது வழக்குகள் போடப்பட்டு இருப்பதாக வந்த செய்தி உண்மையானால் அவற்றை உடனடியாக தமிழக அரசு திருப்ப பெற வேண்டும் என்றும், மக்கள் அதிகாரம் அமைப்பினர் மீது தாக்குதல் நடத்திய காவல்துறை அதிகாரிகள் மீது இலாகாப் பூர்வ நடவடிக்கை எடுக்க பட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

இவர்களின் வருகை கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு ஆறுதலையும், நம்பிக்கையையும் அளிப்பதாக பத்திரிக்கையாளர்கள் கூறினர். இதுவரை வேற எந்த தலைவர்களும் கிராமம், கிராமமாக வந்து மக்களை சந்திக்கவில்லை என்றும், அந்த குறையை இவர்கள் போக்கியிருப்பதாகவும் கூறினர்.

இப்பயணத்தில் மாஜக மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன், மாநில துணைச் செயலாளர் புளியங்குடி செய்பது அலி, மாநில விவசாயிகள் அணி செயலாளர் நாகை முபாரக், தலைமை செயற்குழு உறுப்பினர் காயல் சாகுல், நெல்லை மேற்கு மாவட்ட செயலாளர் மீரான் மற்றும் நிர்வாகிகள், தூத்துகுடி தெற்கு மாவட்ட செயலாளர் ஜாஹிர் மற்றும் நிர்வாகிகள், நெல்லை கிழக்கு மாவட்ட பொருளாளர் ஷேக் இப்ராஹிம் மற்றும் நிர்வாகிகள், ஆகியோரும், மூலகரப்படி அமிர்கான் மற்றும் நிர்வாகிகள், தமிழக கொங்கு இளைஞர் பேரவையை சேர்ந்த தமிழ் அரசன், சரத்குமார்  உள்ளிட்ட சகோதரர்கள் கலந்து கொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJK_IT_WING.
#குமாரி_மாவட்டம்
11.12.17