நாடாளுமன்ற தேர்தல் 2024… கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில்… திமுக மாவட்டச் செயலாளருடன் மஜக நிர்வாகிகள் சந்திப்பு..

மார்ச்.23.,

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான I.N.D.I.A கூட்டணியை ஆதரிப்பதாக (19.03.2024) அன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான திரு. மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்த பின் மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அறிவித்தார்.

அதன் தொடர்ச்சியாக இன்று கிருஷ்ணகிரி மாவட்ட திமுக செயலாளரும், ஓசூர் சட்டமன்ற உறுப்பினருமான திரு Y.பிரகாஷ் MLA, மற்றும் ஓசூர் மாநகர திமுக செயலாளரும், மாநகர மேயருமான திரு S.A.சத்யா அவர்களையும் மஜக மாநில துணைச் செயலாளர் ஓசூர் நவ்ஷாத் தலைமையில் மாவட்ட செயலாளர் முஹம்மது உமர், தலைமை செயற்குழு உறுப்பினர் முஹம்மது ஆரிப் உள்ளிட்ட நிர்வாகிகள் சந்தித்தனர்.

இச்சந்திப்பின் போது கிருஷ்ணகிரியில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரங்கள், களப்பணிகள், ஒருங்கிணைந்த செயல் திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இதில் மாவட்ட துணைச் செயலாளர்கள் சையத் ஜலால், ADS சர்தார், அய்யூப், மாவட்ட இளைஞரணி செயலாளர் மஹபுப் ஷரீப், வர்த்தக அணி செயலாளர் அன்சர், ஓசூர் ஒன்றிய செயலாளர் பாஷா, மாநகர செயலாளர் முகம்மது அப்சல், துணைச் செயலாளர் மகபூப் மற்றும் அன்சார் ஆகியோர் உடன் இருந்தனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#கிருஷ்ணகிரி_மாவட்டம்
23.03.2024.