ஜூலை: 27., கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் மனிதநேய ஜனநாயக கட்சியினர் தீவிர பணியாற்றி வருகின்றனர். அதைத்தொடர்ந்து மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் நவீன டிராக்டர் வாகனங்கள் மூலம் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட செல்வபுரம் பகுதியில் 77,78 மற்றும் 86 வார்டு ஆகிய இடங்களில் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் மாவட்ட பொருளாளர் TMS. அப்பாஸ், அவர்கள் தலைமையில் தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் கோவை சம்சுதீன், மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் செய்யது இப்ராஹிம், தகவல் தொழில் நுட்ப அணி மாவட்ட செயலாளர் சிராஜ், இளைஞரணி மாவட்ட செயலாளர் அன்சர், துணைச் செயலாளர் பைசல் ரகுமான், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் EBR. இப்ராஹிம் , ஆயில் ஹக்கீம், PMA.பைசல், அக்கீம், ABS.அப்பாஸ், 77 வது வார்டு செயலாளர் பயாஸ், 78 வது வார்டு செயலாளர் ஜாகீர், 77 வது வார்டு பொருளாளர் அலி, துணைச்செயலாளர் பீர்முகமது, 78 வது வார்டு துணைச் செயலாளர் சகலை ரஃபி,தொழிற்சங்க செயலாளர் யூசுப், வணிகர் சங்க செயலாளர் ITS.சிக்கந்தர், 77 வது வார்டு முன்னாள் செயலாளர் இப்ராஹிம்,சலீம்,
Month:
முத்துக்கள் ஒளிரும் தீர்ப்பு!மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA அறிக்கை!
மருத்துவ மேற்படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் 50 சதவீதத்தை இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு (0BC) வழங்க சட்டம் நிறைவேற்றலாம் என சென்னை உயர் நீதிமன்றம் இன்று அளித்துள்ள வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை மனிதநேய ஜனநாயக கட்சி வரவேற்று மகிழ்கிறது. இத்தீர்ப்பில் உள்ள பல வாசகங்களும், வரிகளும் முத்துக்களாக ஒளிர்கின்றன. மாநிலங்கள் சமர்ப்பித்த இடங்களை பெற்றப் போது, அவற்றை மத்திய கல்வி நிலையங்களில் அமல்படுத்த ஆட்சேபனை தெரிவிக்காத MCI , மத்திய கல்வி நிறுவனங்கள் இல்லாத பிற நிறுவனங்களில் இதை ஆட்சேபிக்க முடியாது என்றும், மாணவர்களின் குறைந்தபட்ச தகுதியை மத்திய அரசும், MCI யும் தீர்மானிக்க வேண்டும் என்றும், இட ஒதுக்கீடு விவகாரம் குறித்து முடிவெடுக்க மாநில அரசு மற்றும் MCI அடங்கிய குழுவை மத்திய அரசு அமைத்து, 3 மாதங்களில் இது குறித்து முடிவெடுக்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. இந்த தீர்ப்பு பிற மாநிலங்களிலும் விழிப்புணர்வையும், சமூக நீதிக்கான எழுச்சியையும் ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. இந்திய மருத்துவக் கவுன்சில் இப்படிப்பட்ட தீர்ப்பை நிச்சயம் எதிர்பார்த்திருந்திருக்காது. உள்ளுக்குள் இத்தீர்ப்பு குறித்து அதிர்ச்சியடைந்தவர்களையும், வரவேற்கும் நிலையை இத்தீர்ப்பு ஏற்படுத்தியிருக்கிறது. இது தான் தமிழகத்தின் அரசியல் கொள்கையாகவும்,
மத்திய அரசின் ElA வரைவு அறிக்கை மக்கள் விரோதமானது!மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA அறிக்கை!
50 கோடி ரூபாய்க்கு அதிகமாக முதலீடு செய்யும் பெரிய திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு சட்டம் - 2006 ன் விதிகள் அவசியமாகும். இப்போது அதற்கு ஆபத்து நேர்ந்திருக்கிறது. மத்திய பாஜக அரசு கொரோனா நெருக்கடி கால பலஹீனங்களை, தங்கள் ரகசிய திட்டங்களுக்கான வாய்ப்பாக பயன்படுத்தும் விதத்தில் பல்வேறு மக்கள் விரோத சட்டங்களை நிறைவேற்ற துடிக்கிறது. அதன்படி நடைமுறையில் உள்ள சுற்றுச் சூழல் சட்ட விதிமுறைகள் - 2006 ல் சில திருத்தங்களை செய்து ஏப்ரல் 11, 2020 மத்திய அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது. இதை 22 மொழிகளில் வெளியிட்டு, ஆகஸ்ட் 11, 2020 வரை பொதுமக்களிடம் கருத்து கேட்க வேண்டும் என இது தொடர்பான ஒரு வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. இதையும், கடந்த ஏப்ரல் மாதம் உச்சநீதிமன்ற நீதிபதி திரு.சந்திரசூட் அவர்கள் இது தொடர்பாக அளித்த தீர்ப்பையும் மத்திய அரசு கண்டுக்கொள்ளவில்லை. மத்திய அரசின் சூழலியல் தாக்க மதிப்பீடு வரைவு அறிக்கை - 2020 என்பது சூழலியல் நலன் சார்ந்த கட்டுப்பாடுகளை தளர்த்த வழி வகுக்குகிறது. இதனால் நீர் வளங்களும்,விவசாய நிலங்களும், மணல் திட்டுகளும், வனங்களும் பெரு நிறுவனங்களால் எளிதில் சூரையாடப்படும்
MJTS தலைமையக நியமன அறிவிப்பு – மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கத்தின் (MJTS) நெல்லை மாவட்டச்செயளாளர்
மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கத்தின் (MJTS) நெல்லை மாவட்டச்செயளாளராக, S.நாகூர் மீரான் மேலப்பாளையம். அலைபேசி; 9360650313 பொதுச்செயலாளரின் ஒப்புதலுடன் நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவண்; சலிமுதீன் #தலைவர் #மனிதநேய_ஜனநாயக_தொழிற்சங்கம் 27-07-2020
ஊரடங்கில் உணவின்றி தவித்த ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கிய மஜகவினர்!
ஜுலை.27., கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக தமிழகமெங்கும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன் எதிரொலியாக மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாநகர் மாவட்ட பொள்ளாச்சி நகரத்தின் சார்பில் சாலையோரத்தில் வசித்துவரும் ஆதரவற்ற மக்களுக்கு உணவு பொட்டலங்கள் பொள்ளாச்சி நகர செயலாளர் ராஜா ஜெமீஷா, அவர்கள் தலைமையில் வழங்கப்பட்டது. இதில் நகர துணை செயலாளர் அன்சார், நகர இளைஞரணி செயலாளர் அலாவுதீன், இளைஞரணி பொருளாளர் முஹம்மது இஸ்மாயில், இளைஞரணி துணை செயலாளர்கள் ராஜா, சௌக்கத், முகமது அலி, நகர தகவல் தொழில் நுட்ப அணி செயலாளர் ஹபீப் அன்சாரி, மருத்துவ அணி செயலாளர் ஜான்ஸ்கான்,15 வது வார்டு செயலாளர் அப்பாஸ், மற்றும் அஷ்ரப், அஜ்மல், சமீர் உள்ளிட்ட மஜக வினர்கள் கலந்து கொண்டு உணவு பொட்டலங்களை விநியோகம் செய்தனர். தகவல். #மஜக_தகவல்_தொழில்_நுட்ப_அணி #MJKITWING #பொள்ளாச்சி_நகரம் #கோவை_மாநகர்_மாவட்டம் 26/07/2020