ஜன.17., குடியுரிமை சட்டத் திருத்தத்தை கண்டித்து கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் நெம்மாரை பகுதியில் அனைத்து ஜமாத்துகள் சார்பில் மாபெரும் கண்டன பேரணி நடைபெற்றது. இதில் கேரள சட்டமன்ற உறுப்பினர் பாபு,MLA,மற்றும் மார்க்க அறிஞர்கள் கண்டன உரை நிகழ்த்தினர். அவர்கள் பேசும் போது தமிழகத்திலிருந்து மனிதநேய ஜனநாயக கட்சி நிர்வாகிகள் வந்திருப்பதாகவும் அவர்களின் பொதுச் செயலாளர் மு.தமிமுன்அன்சாரி MLA அவர்களின் பேச்சுக்களையும், அவரின் செயல்பாடுகளையும் தாங்கள் அறிந்து வருவதாகவும் தமிழக சட்டமன்றத்தில் அவரின் தனித்தன்மையான செயல்பாடுகள் குடியுரிமை சட்டத்திற்கெதிரான அவரின் போராட்ட வழிமுறைகள் அனைத்தையும் நாங்கள் அறிந்து வருகிறோம் என பாராட்டி பேசினர். மேலும் மனிதநேய ஜனநாயக கட்சியின் கோவை மாநகர் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், திருப்பூர் மாவட்ட செயலாளர் ஹைதர்அலி, ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினர். அவர்களுடன் மஜக மாவட்ட அணி நிர்வாகிள் காஜா,அன்வர், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இப்பேரணியில் அனைத்து ஜமாத் நிர்வாகிகள், உலமாக்கள், மார்க்க அறிஞர்கள், மற்றும் பொதுமக்கள் என திரளானோர் பங்கேற்று மத்திய அரசைக்கண்டித்து முழக்கமிட்டனர். தகவல் #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #கோவைமாநகர்மாவட்டம்
Month:
கூட்டமைப்பு சார்பாக கறுப்பு சட்டங்களுக்கு எதிராக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் : மஜக பொருளாளர் ஹாரூன் ரசீது பங்கேற்பு..!
சென்னை.ஜனவரி.17.., கறுப்பு சட்டங்களான CAA, NRC, NPR, போன்ற சட்டங்களுக்கு எதிராக இந்தியா முழுவதும் போராட்டங்களை இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பட்ட மக்களாலும் முன்னெடுக்கபட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை போரூர் மற்றும் மதுரவாயல் சுற்றுவட்டார ஜமாத்துகள், அனைத்து கட்சிகள் மற்றும் இயக்கங்கள் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் பரபரப்பான போரூர் (சிக்னல்) பிரதான சாலையில் நடைபெற்றது, இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக கட்சியின் மாநிலப் பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது பங்கேற்று மத்திய அரசுக்கு எதிராகவும், கறுப்பு சட்டங்களை திரும்ப பெற வழியுறுத்தியும் கண்டன உரை நிகழ்த்தினார். அவர் பேசுகையில்.... மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த சட்டங்களை திரும்ப பெறவில்லை என்றால் இந்தியாவில் மீண்டும் ஓர் சுதந்திர போராட்டம் நடைபெறும், அதன் தொடக்கம் தான் இப்போராட்டம். இங்கு கலந்து கொண்ட அனைவரும் இயக்கங்கள், கட்சிகளின் பேதமின்றி தேசிய கொடியை கையில் ஏந்தி வந்துள்ளனர் என்றும், இது ஆரம்பம் தான் நாங்கள் ஒரு போதும் போராட்டங்களில் இருந்து பின்வாங்க மாட்டோம், தொடர் போராட்டங்களால் சோர்வடையவும் மாட்டோம் என்று சூழுரைத்தார்.
பிப்01 போராட்டம் குறித்து வீடு வீடாக பிரச்சாரம்! மஜக கூட்டத்தில் தீர்மானம்!
திருமருகல்.ஜன.16, மனிதநேய ஜனநாயக கட்சியின் நாகை தெற்கு மாவட்டம், திருமருகல் ஒன்றியம், ஆதலையூர், கரைப்பாக்கம், கேதாரிமங்களம், ஏனங்குடி கிளைகளின் ஒருங்கிணைந்த கூட்டம் நேற்று மாவட்ட துணை செயலாளர் முன்சி யூசுப்தீன் தலைமையில் மாவட்ட செயலாளர் செ.செய்யது ரியாசுதீன் முன்னிலையில் நடைப்பெற்றது. கறுப்பு சட்டங்களான CAA, NRC யை கண்டித்து எதிர்வரும் பிப்.01 தேதி ஏனங்குடியில் கூட்டமைப்பு சார்பில் நடைப்பெறவுள்ள பேரணி ஆர்ப்பாட்டத்திற்கு வீடுவீடாக சென்று சட்டங்களை குறித்து மக்களிடம் விளக்கி பெரும்பான்மையாக நபர்களை போராட்டத்தில் பங்கேற்க செய்வது என தீர்மானிக்கப்பட்டது. முன்னதாக, ஊரக உள்ளாட்சி தேர்தலில் மஜக வேட்பாளருக்கு வாக்களித்தமைக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில், அன்வர்தீன், பகுருதீன், IT WING நிசாத், கிளை நிர்வாகிகள் பாவா, முத்து மரைக்கான், யாசின், சிராஜ், முத்து, சம்சு, ஜாசிம், அசார், அல்தான், நபிஸ், இம்தியாஸ், அஸ்லம், அக்ரம், ஆசிப் உள்ளிட்ட நிர்வாகிகளும், செயல்வீரர்களும் திரளாக பங்கேற்றனர். தகவல் ; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJKitWING #நாகைதெற்குமாவட்டம். 15/01/2020
விசிகதலைவர் திருமாவளவன் அவர்களுடன் கூட்டமைப்பு தலைவர்கள் சந்திப்பு
சென்னை.ஜனவரி.15.., குடியுரிமை திருத்த சட்டங்களுக்கு (CAA, NRC, NPR) எதிராக தொடர் நடவடிக்கையில் ஈடுபட வலியுறுத்தி அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் சார்பில் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன்.MP அவர்களை இன்று சந்தித்தனர். இச்சந்திப்பில் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மன்சூர் காஷிஃபி தலைமையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் என்.ஏ.தைமிய்யா, மாநில துணைச் செயலாளர் புதுமடம் அனிஸ் மற்றும் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் மற்ற தலைவர்களும் சந்தித்து உரையாடினர் . தகவல், #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #சென்னை 15-01-2020
கூட்டமைப்பு சார்பில் பேரணி ஆர்ப்பாட்டம்! மஜக கொள்கை விளக்க அணி மாநிலசெயலாளர் பங்கேற்பு!
மாயவரம். ஜனவரி-15, மத்திய அரசின் கறுப்பு சட்டங்களுக்கு எதிராக வடகரை-அரங்குடியில் கூட்டமைப்பு சார்பில் அரங்குடியில் கவன ஈர்ப்பு பேரணி தொடங்கி வடகரை பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மஜக-வின் கொள்கை விளக்க அணி மாநில செயலாளர் கோவை A.T. நாசர் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார். மேலும், பேரா.த.ஜெயராமன், S.நவாஸ்கான் தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர். போராட்டக்காரர்கள் தேசிய கொடிகளுடனும், No CAA,NPR,NRC பதாகைகளை ஏந்திய வாரும் எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பியவாரு பேரணியில் பங்கேற்றனர். இப்போராட்டத்தில் மஜக மாவட்ட செயலாளர் N.M.மாலிக், தலைமை செயற்குழு உறுப்பினர் ஆக்கூர் ஷாஜஹான், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் நீடுர் ஜெப்ருதீன், செம்பை ஒன்றிய மு.செயலாளர் நிஜாமுதீன், வடகரை-அரங்ககுடி கிளை பொறுப்பாளர்கள் மற்றும் பல்வேறு சமூக நல இயக்க, கட்சிகளின் நிர்வாகிகளும், பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர். தகவல் ; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJKitWING #நாகைவடக்குமாவட்டம். 14/01/2020