பிப்01 போராட்டம் குறித்து வீடு வீடாக பிரச்சாரம்! மஜக கூட்டத்தில் தீர்மானம்!

திருமருகல்.ஜன.16,
மனிதநேய ஜனநாயக கட்சியின் நாகை தெற்கு மாவட்டம், திருமருகல் ஒன்றியம், ஆதலையூர், கரைப்பாக்கம், கேதாரிமங்களம், ஏனங்குடி கிளைகளின் ஒருங்கிணைந்த கூட்டம் நேற்று மாவட்ட துணை செயலாளர் முன்சி யூசுப்தீன் தலைமையில் மாவட்ட செயலாளர் செ.செய்யது ரியாசுதீன் முன்னிலையில் நடைப்பெற்றது.

கறுப்பு சட்டங்களான CAA, NRC யை கண்டித்து எதிர்வரும் பிப்.01 தேதி ஏனங்குடியில் கூட்டமைப்பு சார்பில் நடைப்பெறவுள்ள பேரணி ஆர்ப்பாட்டத்திற்கு வீடுவீடாக சென்று சட்டங்களை குறித்து மக்களிடம் விளக்கி பெரும்பான்மையாக நபர்களை போராட்டத்தில் பங்கேற்க செய்வது என தீர்மானிக்கப்பட்டது.

முன்னதாக, ஊரக உள்ளாட்சி தேர்தலில் மஜக வேட்பாளருக்கு வாக்களித்தமைக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதில், அன்வர்தீன், பகுருதீன், IT WING நிசாத், கிளை நிர்வாகிகள் பாவா, முத்து மரைக்கான், யாசின், சிராஜ், முத்து, சம்சு, ஜாசிம், அசார், அல்தான், நபிஸ், இம்தியாஸ், அஸ்லம், அக்ரம், ஆசிப் உள்ளிட்ட நிர்வாகிகளும், செயல்வீரர்களும் திரளாக பங்கேற்றனர்.

தகவல் ;

#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#நாகைதெற்குமாவட்டம்.
15/01/2020