குடியுரிமைசட்டத் திருத்தத்திற்கு எதிராக கேரளாவில் நடைபெற்ற மாபெரும் பேரணி : மஜக நிர்வாகிகள் பங்கேற்பு!!

ஜன.17.,

குடியுரிமை சட்டத் திருத்தத்தை கண்டித்து கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் நெம்மாரை பகுதியில் அனைத்து ஜமாத்துகள் சார்பில் மாபெரும் கண்டன பேரணி நடைபெற்றது.

இதில் கேரள சட்டமன்ற உறுப்பினர் பாபு,MLA,மற்றும் மார்க்க அறிஞர்கள் கண்டன உரை நிகழ்த்தினர்.

அவர்கள் பேசும் போது தமிழகத்திலிருந்து மனிதநேய ஜனநாயக கட்சி நிர்வாகிகள் வந்திருப்பதாகவும் அவர்களின் பொதுச் செயலாளர் மு.தமிமுன்அன்சாரி MLA அவர்களின் பேச்சுக்களையும், அவரின் செயல்பாடுகளையும் தாங்கள் அறிந்து வருவதாகவும் தமிழக சட்டமன்றத்தில் அவரின் தனித்தன்மையான செயல்பாடுகள் குடியுரிமை சட்டத்திற்கெதிரான அவரின் போராட்ட வழிமுறைகள் அனைத்தையும் நாங்கள் அறிந்து வருகிறோம் என பாராட்டி பேசினர்.

மேலும் மனிதநேய ஜனநாயக கட்சியின் கோவை மாநகர் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், திருப்பூர் மாவட்ட செயலாளர் ஹைதர்அலி, ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினர்.

அவர்களுடன் மஜக மாவட்ட அணி நிர்வாகிள் காஜா,அன்வர், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இப்பேரணியில் அனைத்து ஜமாத் நிர்வாகிகள், உலமாக்கள், மார்க்க அறிஞர்கள், மற்றும் பொதுமக்கள் என திரளானோர் பங்கேற்று மத்திய அரசைக்கண்டித்து முழக்கமிட்டனர்.

தகவல்

#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#கோவைமாநகர்மாவட்டம்