சென்னை.ஜனவரி.04.., CAA, NRC, NPR உள்ளிட்ட கருப்பு சட்டங்களுக்கு எதிராக இந்தியா முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அமைதி வழியில் பேரணிகள் & ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பொதுக்கூட்டங்கள் உள்ளிட்ட பல போராட்டங்களை அனைத்து இயக்கங்கள், கட்சிகள், மாணவ அமைப்புகள் என பல்வேறு தரப்பினரும் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர். இதனடிப்படையில், நேற்று 03.01.2020 மதியம் 2.30 மணியளவில் சென்னை ஜமாஅத் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் K.அமானுல்லா கான் அவர்களின் தலைமையில் ஐஸ் ஹவுஸ் பள்ளிவாசல் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக மாநில துணைச் செயலாளர் புதுமடம் அனிஸ் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினார். மேலும் இக்கூட்டத்தில் மாநில துணைச் செயலாளர் திருமங்கலம் ஷமீம் அகமது, மாநில இளைஞரணிச் செயலாளர் முஹம்மது அஸாருதீன், மாணவர் இந்தியா மாநிலப் பொருளாளர் பஷீர் அஹமது, மத்திய சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் பிஸ்மில்லாஹ் கான், மேற்கு மாவட்ட பொறுப்புக்குழு தலைவர் சாகுல் ஹமீது, வர்த்தக அணி செயலாளர் புதுப்பேட்டை யூசுப் ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் திமுக பாராளுமன்ற உறுப்பினர் திரு.தயாநிதி மாறன் MP, திமுக சட்டமன்ற உறுப்பினர் J.அன்பழகன், காங்கிரஸ்
Month:
ஈழத்தமிழர்கள் உங்களுக்கு என்ன கெடுதல் செய்தார்கள்? மு.தமிமுன் அன்சாரி MLA கேள்வி!
ஜன.04, தஞ்சாவூரில் கூட்டமைப்பு சார்பில் மத்திய அரசின் கறுப்பு சட்டங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பேரா.காதர் மைதீன், தோழர் பெ.மணியரசன், பழனிமாணிக்கம் MP, முன்னாள் அமைச்சர் உபையதுல்லா, தோழர்.ஜீவகுமார், துரை.சந்திரசேகரன் MLA, நீலமேகம் MLA, தோழர். P செந்தில் குமார், தோழர்.சொக்கா.ரவி உள்ளிட்டோர் உரையாற்றினர். இதில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்கள் பங்கேற்று பேசியதாவது:- 'CAA சட்டத்தின் வழியாக யாருக்கும் குடியுரிமை கொடுக்க கூடாது என நாம் கூறவில்லை. அண்டை நாடுகளிலிருந்து அகதிகளாக யார் வந்தாலும் கருணையுடன் பரிசீலிக்க வேண்டும் என்கிறோம். இதில் ஈழத் தமிழர்களை புறக்கணித்தது என்ன நியாயம்? என்கிறோம். அவர்கள் உங்களுக்கு என்ன கெடுதல் செய்தார்கள்? மூன்று தலைமுறைகளாக அகதிகளாக இங்கே இருக்கிறார்கள். அவர்களை நிராகரிக்கலாமா? பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தானிலிருந்து வரும் இந்துக்களையும், சீக்கியர்களையும் ஏற்கும் நீங்கள் ஈழத்தமிழர்களை வஞ்சிக்கலாமா? அவர்களையும் இதில் இணைத்து குடியுரிமை வழங்குங்கள் என்கிறோம். நேபாளத்திலும், பூடானிலும் மத ஒடுக்குமுறைகளுக்கு ஆளாகும் கிறிஸ்தவர்களையும், இந்திய - பாகிஸ்தான் எல்லையில் வசிக்கும், அதே போல இந்திய - பங்களாதேஷ் எல்லையில் வசிக்கும் இந்திய வம்சாவளி முஸ்லிம்களையும் அகதிகளாக வந்தால் அதை ஏற்று குடியுரிமை வழங்குங்கள் என்கிறோம். இதை ஏற்க மாட்டோம் என்பதால்
திருச்சியில் மஜக சார்பில் குடியுரிமை சட்டத்தை காவிரியாற்றில் புதைக்கும் நூதன போராட்டம்!
மனிதநேய ஜனநாயக கட்சியின் திருச்சி மாவட்டம் சார்பாக குடியுரிமை சட்டத்தை காவிரி ஆற்றில் புதைக்கும் போராட்டம் மாவட்ட செயலாளர் அஷ்ரப் அலி தலைமையில் நடைபெற்றது. இப்போராட்டத்தை தலைமை செயற்குழு உறுப்பினர் இப்ராஹீம் ஷா கண்டன முழக்கஙகளை எழுப்பி துவக்கி வைத்தார். தொடர்ந்து போராட்ட நகர்வுகளை ஒழுங்குப்படுத்தினார். குடியுரிமை சட்ட நகல்களை வைக்கோலால் தயார் செய்யப்பட்ட பொம்மையின் உள் வைத்து தூக்கி சென்று புதைக்க முற்படுகையில் அதனை காவல்துறையினர் தடுத்து பறிமுதல் செய்து அப்புறப்படுத்தினர். இதில், பேரா.மைதீன், மஜ்லிஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் சம்சுதீன், தமஜக மாவட்ட செயலாளர் ராயல் சித்திக், வெல்ஃபேர் பார்ட்டி ஆப் இந்தியா மாவட்டத்தலைவர் ஜமால், NTF மாவட்ட செயலாளர் மற்றும் அரியமங்கலம் பகுதி இளைஞர்கள் பொதுநல அமைப்பினர் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார். மஜகவின் நிர்வாகிகள் பக்கீர் மைதீன், தர்கா பாரூக், அந்தோணி, கிருஷ்ண மூர்த்தி, புரோஸ்கான், தென்னூர் சதாம், அப்பாஸ், கமால், முகமது பீர்ஷா, அப்துல் காதர் மற்றும் மேலும் பல்வேறு கட்ட நிர்வாகிகள், ஜமாத்தார்கள், கல்லூரி மாணவர்கள் என திரளாக இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர். பாலக்கரையின் மையப்பகுதியில் நடைபெற்ற இப்போராட்டம் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது. தகவல் ; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJKitWING #திருச்சி_மாவட்டம்.
நள்ளிரவில் உணர்ச்சிமிகு போராட்டம்.! பதட்டத்தில் தவித்த கவர்னர் மாளிகை..!
சென்னை.ஜனவரி.1.., 2020 ஆம் ஆண்டு தொடங்கிய நள்ளிரவு அது இந்தியாவின் போராட்டத்திற்கும், மாற்றத்திற்குமான ஆண்டாக மலர்ந்துள்ளது. அந்த குளிர் மிகு இரவில் 11:45-க்கெல்லாம் நூற்றுக்கணக்கானோர் கூடினர். சரியாக 12 மணிக்கு பறை முழக்கமிட்டு மத்திய அரசின் கறுப்பு சட்டங்களுக்கு எதிராக ஆண்களும், பெண்களும் முழக்கமிட்டனர். மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA, தோழர் தியாகு, சுயராஜ்.பாலகிருஷ்ணன், கெளஸ், தவஸி, KM.ஷெரீப், குமரன், இக்பால், பாத்திமா முஸப்பர் உள்ளிட்ட சமூக செயல்பாட்டாளர்களும் முழக்கங்களை எழுப்பினர். ஏராளமான படைப்பாளிகளும் திரண்டு வந்து, தரையில் அமர்ந்து ஆர்ப்பரித்தனர். அகில இந்திய அளவில் ஊடகங்கள் இவற்றை நேரலை செய்தன. கவர்னர் மாளிகை நோக்கி என அறிவிப்பு செய்யப்பட்டிருந்ததால், கவர்னர் மாளிகையை சுற்றிலும் சுமார் 1500 போலிசாரும், அதிரடிப்படையினரும் குவிக்கப்பட்டிருந்தனர் சைதைப்பேட்டை பனகல் மாளிகை அருகே இப்போராட்டம் நடந்ததால், அண்ணாசாலையில் பலத்த பாதுகாப்பு வளையம் கட்டப்பட்டிருந்தது. அமைதியாக கூடிய சமூக செயல்பாட்டாளர்களும், படைப்பாளிகளும், மஜக நிர்வாகிகளும் தங்கள் நள்ளிரவு போர் குரலை எழுப்பி விட்டு அமைதியாக கலைந்தனர். தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #சென்னை. 31-12-2019 https://m.facebook.com/story.php?story_fbid=2190308641068899&id=700424783390633
NTF மாநில நிர்வாகிகள் மஜக பொருளாளர் எஸ் எஸ் ஹாரூன் ரசீது அவர்களுடன் சந்திப்பு
சென்னை.ஜன.1.., நேற்று (31/12/2019) மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமையகத்திற்கு தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு (NTF) மாநிலப் பொருளாளர் அதிரை ஜாஹிர், மாநிலச் செயலாளர்கள் தாஜுதீன், கமருதீன், மாநில பிரதிநிதி அபுகிதர் மண்ணடி தவ்ஹீத் பேரவை ஷாநவாஸ் ஆகியோர் வருகை புரிந்தனர். மஜக தலைமையகத்தில் மாநிலப் பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது., அவர்களை நேரில் சந்தித்த NTF நிர்வாகிகள், தற்போது இந்தியாவில் மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத்திற்கு எதிராக இந்தியா முழுவதும் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் மத்திய மாநில அரசுகள் மக்களின் உணர்வுகளுக்கு செவிசாய்க்காமல் உள்ளன. இச்சூழ்நிலையில் தமிழகத்தில், அனைத்து இஸ்லாமிய அமைப்புகளும் ஒருங்கிணைந்து, CAA, NRC, NPR க்கு எதிராக அடுத்த கட்ட போராட்ட வியூகம் அமைக்க ஒன்று கூடுவதற்காக NTF நிறுவனத் தலைவர் P.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு அழைப்பு விடுத்த கடிதத்தை மஜக பொருளாளர் அவர்களிடம் வழங்கினார்கள். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #தலைமையகம் 31.12.2019 https://m.facebook.com/story.php?story_fbid=2189996184433478&id=700424783390633