டிச.22, மத்திய அரசின் CAA மற்றும் NRC கருப்பு சட்டங்களுக்கு எதிராக திண்டுக்கல்லில் ஜமாத்துல் உலமா மற்றும் கூட்டமைப்பு சார்பில் கண்டன மாநாடு எழுச்சியோடு நடைப்பெற்றது. கூட்டத்தில் சிறப்பம்சமாக ஐயப்ப சாமி பக்தர்களும் பங்கேற்று கண்டன முழக்கத்தில் முழங்கியதை மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி போன்றோர் ரசித்தனர். ஜம்மியத்துல் உலமா ஹிந்த்தின் தமிழக தலைவர் M. மஹ்மூத் மன்சூர் காஸிபி ஹஜ்ரத் அவர்கள் இந்துக்களும், முஸ்லிம்களும் ஃபாஸிஸ்டுகளுக்கு எதிராக போராடுவதை சிலாகித்து பேசினார். மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA பேசும் போது, போராட்டம் பொறுப்புணர்வுடன் அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லப் பட வேண்டியதின் அவசியத்தை எடுத்துக் கூறினார். மேடைகளில் பேசுபவர்கள் கண்ணியமான வார்த்தைகளை பயன்படுத்தி கருத்துக்களை முன்வைக்க வேண்டும் என்றார். பிறகு, நாட்டில் நடைபெறும் கிளர்ச்சிகளை பட்டியலிட்டவர். அரசப் படைகளின் துப்பாக்கி சூடுகளை கண்டித்தார். இன்று நடைபெறும் அனைத்து அமளிகளுக்கும் பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷா ராஜினாமா செய்ய வேண்டும் என காட்டமாக பேசினார். மாலை 4 மணியிலிருந்து இரவு 9:45 வரை கூட்டம் கட்டுக்கடங்காமல், அதே நேரம் கட்டுப்பாட்டோடு இருந்தது அனைத்து தரப்பாலும் பாராட்டப்பட்டது. தகவல் ; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJKitWING #திண்டுக்கல்_மாவட்டம்.
Month:
வேலூரில் மஸாஜித் அசோசியேஷன் மற்றும் அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் சார்பில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம்
மஜகநிர்வாகிகள்பங்கேற்பு...! வேலூர்.டிச.22.., வேலூரில் மஸாஜித் அசோஸியேஷன் மற்றும் அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த வெள்ளிக்கிழமை (20/12/2019) மாலை 3-மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டம் மஸாஜித் அசோஸியேஷன் தலைவர் ஹாஜி அப்துல் அலீம் சாஹிப் அவர்கள் தலைமையில் ஹஜ்ரத் மௌலானா ஷைபுதீன் ரஷாதி, எழுத்தாளர் தோழர் வே.மதிமாறன், வேலூர் பிலிப் ஆகியோர் கண்டன உரை வழங்கினர். போராட்டத்தில் கண்டன உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும் போது அவ்வழியாக ஆம்புலன்ஸ் ஒன்று வந்தது. அப்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் அனைவரும் ஒதுங்கி ஆம்புலன்ஸுக்கு வழி ஏற்படுத்தித் தந்தனர், இந்த செயல் அந்தப்பகுதியில் உள்ள அனைவரையும் நெகிழ செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. போராட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் முஹம்மத் யாஸீன் அவர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினார். இதில் மஜக வேலூர் மாவட்ட, மண்டல, கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இக்கண்டன ஆர்பாட்டத்தில் வேலூர் அனைத்து முஹல்லா ஜமாத்தார்கள், அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள், கட்சிகள் என திரளானோர் கலந்து கொண்டனர். தகவல், #மஜகதகவல்தெழில்நுட்பஅணி #MJK_IT_WING #வேலூர்_மாவட்டம். 20-12-2019
தமிழ்நாடு எழுகிறது, முதமிமுன்அன்சாரி MLA பேச்சு!
#கறுப்புச்சட்டங்களைதமிழகத்தில்திணிக்கநினைத்தால்தமிழர்கள்அதைகிழித்துஎறிவார்கள்! மஜகபொதுச்செயலாளர் # டிச.21, கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் கூட்டமைப்பு சார்பில் அனைத்து சமூக மக்களும் பங்கேற்ற பிரம்மாண்ட பேரணி நடைப்பெற்றது. கூட்டத்தில் "நாமே இந்தியர் என்போம்' என பொருள்படும் ராணுவத்தில் இசைக்கப்படும் ,"சாரே ஜஹாங் சே அச்சா ° என்ற பாடல் ஒலிபரப்பானதும், கூட்டம் எழுந்து நின்று இந்திய தேசிய கொடியை அசைத்து ஆராவரித்தது. "மதத்தால் மக்களை பிரிக்காதே.. நாட்டின் ஒற்றுமையை குலைக்கதே.." என முழக்கங்கள் அதிர்ந்தன. பழைய பெங்களுர் சாலை நெடுகிலும் கூட்டம் வழிந்து நின்றது. ஆயினும் யாருக்கும் தொந்தரவு இல்லாமல் கூட்டம் நாகரீகமாக கூடியிருந்தது. பல இந்து சமுதாய சகோதரர்கள் தொண்டர் அணியாக நின்று மக்களை ஒழுங்குப் படுத்தினர். கட்டிடங்களில் மேல் எல்லாம் கூட்டம் ஏறி நின்று மோடி - அமித் ஷாவுக்கு எதிராக ஆர்ப்பரித்தது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA பேசியதாவது:- "மோடிக்கும், அமித் ஷாவுக்கும் நாங்கள் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். இந்துக்களையும், முஸ்லிம்களையும் நீங்கள் பிரிக்க நினைத்தீர்கள். இன்று உங்களுக்கு எதிராக நாங்கள் அண்ணன், தம்பிகளாக இணைந்து போராடுகிறோம். நீங்கள் கறுப்பு சட்டத்தை திணிக்க நினைத்ததால், இன்று நாங்கள் இந்தியர்களாக ஒன்று திரண்டு ஜனநாயகத்தை பாதுகாக்க போராடுகிறோம். கடந்த 72 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தியாவின் பொருளாதாரம்
மதுக்கூரில் இஸ்லாமியக் கூட்டமைப்பின் சார்பில், குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்தரங்கம்.!
#மஜகமாநிலப்பொருளாளர்_பங்கேற்பு.!! மதுக்கூர்.டிச.20.., மதுக்கூரில் இஸ்லாமிய கூட்டமைப்பின் சார்பில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று (20/12/2019) மாலை 6-மணிக்கு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநிலப் பொருளாளர் எஸ்.எஸ். ஹாரூன் ரசீது அவர்கள் கலந்து கொண்டு குடியுரிமை சட்டத்தின் பாதிப்புகள் குறித்து பேசினார். இந்நிகழ்ச்சியில் தமுமுக பொதுச்செயலாளர் ஹாஜா கனி, எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில பேச்சாளர் இமாம் ஹஸ்ஸான் பைஃஜி ஆகியோர் கருத்துரை வழங்கினர். இதில் மஜக மாநில துணை பொதுச் செயலாளர் மதுக்கூர் ராவுத்தர்ஷா, தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் பேராவூரணி அப்துல் சலாம், மாவட்டப் பொருளாளர் ஓரத்தநாடு பஷீர் அஹமது, தஞ்சை மத்திய மாவட்ட துணைச் செயலாளர் மைதீன், ஜித்தா மண்டல மு.பொருளாளர் அதிரை சேக், அதிரை நகரச் செயலாளர் அப்துல் சமது, துணைச் செயலாளர் அரபாஃத், மதுக்கூர் நகரச் செயலாளர் ரிபாஃயுதீன், துணைச் செயலாளர் மாஜி, சாகுல் ஹமிது, யஹ்யா ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் மதுக்கூர் அனைத்து முஹல்லா ஜமாத்தார்கள், அனைத்து கட்சிகள் மற்றும் பெண்கள் என திரளானோர் கலந்து கொண்டனர். கூட்டத்தை மதுக்கூர் ஜமாத், கட்சிகள், இயக்கங்கள் கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் சிறப்பாக ஏற்பாடு செய்து
இன்றைய போராட்டங்கள் பாஸிஸ்டுகளிடமிருந்து இந்தியாவை மீட்பதற்கான_நடவடிக்கைகள்.! முதமிமுன்அன்சாரி MLA பேச்சு!
டிச.21, NRC மற்றும் CAA கருப்பு சட்டங்களுக்கு எதிராக கோவை மாநகரில் , கூட்டமைப்பு சார்பில் பிரம்மாண்டமான கண்டன மாநாடு நடைப்பெற்றது. முன்னதாக காலையில் வணிகர்கள் கடையை அடைத்து மத்திய அரசுக்கெதிராக தங்கள் கண்டனத்தை வெளிப்படுத்தினர். மாலை நடைப்பெற்ற கண்டன மாநாடு காரணமாக கோவை மாநகரமே ஸ்தம்பித்து போனது. பாலக்காடு சாலை, பொள்ளாச்சி சாலை என எங்கும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இந்த சூழலில் மாநாட்டு பகுதிக்கு ஆம்புலன்ஸ் ஒன்று அலரியபடியே வந்தது. உடனே கூட்டத்தினர் அதற்கு வழிவிட்டு தங்கள் மனிதநேயத்தை வெளிப்படுத்தினர். அதுபோல் மற்றொரு சம்பவமும் எல்லோரையும் நெகிழ வைத்தது. அவ்வழியே ஐய்யப்ப சாமி பக்தர்கள் வந்ததும் முஸ்லிம்கள் அவர்களுக்குரிய மரியாதையை செய்து, அவர்கள் அப்பகுதியை கடந்து செல்ல உதவி செய்தனர். இதைகண்ட பத்திரிக்கையாளர்களும், காவல்துறையினரும் மனம்திறந்து அனைவரையும் பாராட்டினர். இந்த மாபெரும் கண்டன மாநாட்டில் பல்வேறு தரப்பினரும் வருகை தந்து தங்களது ஆதரவை நல்கினர். இம்மாநாட்டில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA பங்கேற்று மத்திய அரசிற்கு எதிரான தனது கண்டனத்தை பதிவு செய்தார். அவரது உரையின் முக்கிய பகுதிகள் பின்வருமாறு... இன்று சாதி, மத, மொழி பேதம் கடந்து, இந்திய