சுதந்திர தினத்தை முன்னிட்டு மஜக சார்பில் மாபெரும் இரத்ததான முகாம்..!

கோவை. ஆக.15., மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாநகர் மாவட்டத்தின் சார்பில்.

நமது இந்திய தேசத்தின் 72வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவை அரசு மருத்துவ மனையுடன் இணைந்து மாபெரும் இரத்ததான முகாம் மருத்துவ அணி மாவட்ட செயலாளர் அபு, தலைமையில் நடைபெற்றது.

மருத்துவ அணி மாவட்ட துணை செயலாளர் செய்யது இப்ராஹிம், வரவேற்புரையாற்றினார்.

இரத்ததான முகாமை துணை பொதுச்செயலாளர் சுல்தான்அமீர், அவர்கள் தொடங்கி வைத்தார்.

இதில் மாநில துணை செயலாளர் அப்துல்பஷீர், மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாநில செயற்குழு உறுப்பினர் ஷாஜகான், மாவட்ட துணை செயலாளர் ABT.பாருக், சிங்கை சுலைமான், PM.முகம்மதுரபீக், மற்றும் மாவட்ட அணி, பகுதி, கிளை, நிர்வாகிகள் கலந்து கொண்டனர்..

இந்த முகாமில் அந்த பகுதியை சேர்ந்த
பொதுமக்களும் இளைஞர்களும் பெரியோர்களும் தங்களது ரத்தத்தை அரசு மருத்துவ மனைக்கு தானமாக வழங்கினர்.

குருதி கொடையாளர்கள் அனைவருக்கும் அவர்களின் இரத்ததான சேவையை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கான சிறப்பான ஏற்பாடுகளை கிணத்துகடவு பகுதி மருத்துவஅணி செயலாளர் அக்கீம், தெற்கு பகுதி செயலாளர் அசார், மற்றும் கிழக்கு பகுதி
நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#கோவை_மாநகர்_மாவட்டம்
15-8-2018