ஏப்.08., மனிதநேய ஜனநாயக கட்சியின் புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோயில் ஒன்றியத்திற்கு உட்பட்ட முத்துக்குடா நகர கிளை இன்று உதயமானது. இதில் மாவட்ட செயலாளர் துறை முகம்மது தலைமையில் மாவட்ட பொருளாளர் ரஹீம் தாலிப், மாவட்ட துணை செயளாலர்கள் முகம்மது ஜான், முகம்மது ஹாரிஸ், லெட்சுமணன் ஆகியோர் மற்றும் மாவட்ட,ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர். தகவல் : மஜக ஊடகப்பிரிவு
தமிழகம்
தமிழகம்
கொங்கு புரட்சி பேரவை மஜகவுக்கு ஆதரவு
கொங்கு புரட்சி பேரவையின் நிறுவன தலைவர் வேலு சண்முக ஆனந்தம் தனது நிர்வாகிகளுடன் மஜக தலைமையத்திற்கு வருகை புரிந்து பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரியை சந்தித்து ஒட்டன்சத்திரம் தொகுதிக்கான தனது ஆதரவை நல்கினார் . தொடர்ந்து கொங்கு மண்டலத்தில் சிறுபான்மை மக்களும் , கொங்கு சமூக மக்களும் ஒற்றுமையாக வாழ்வதற்கு இரு அமைப்புகளும் பாடுபட வேண்டும் என்று உறுதியேற்று கொண்டது . இவண் -மஜக ஊடகப்பிரிவு
மனிதநேய ஜனநாயக கட்சியின் கோடைக்கான தண்ணீர் பந்தல் திறப்பு…
ஏப்.02., கும்பகோணத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி இளம் புயல் ஆட்டோ தோழர்கள் சங்கத்தின் சார்பில் குடந்தை மஜக நகர செயலாளர் நிஜாம் மைதீன் அவர்கள் தலைமையில் கோடைக்கான தண்ணீர் பத்தல் திரக்கப்பட்டது. இதில் தஞ்சை வடக்கு மாவட்ட துணைசெயலாளர் முகமது யாசின், ஒன்றிய பொருப்பாளர் இப்ராஹிம்ஷா, குடந்தை நகர துணை செயலாளர் தஜீமல் ஆகியோர் கலந்துக் கொண்டார்கள். இக்கூட்டத்தில் எதிர் வரும் சட்டமன்ற தேர்தலில் மஜக எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கிறதோ அந்த கட்சிக்கு தான் அனைவரும் ஓட்டு போடுவோம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது... எல்லாப் புகழும் இறைவனுகே...!!! -தகவல் : மஜக ஊடகப்பிரிவு குடந்தை நகரம்.
வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரி மாணவர்கள் மஜகவில் இணைந்தனர்.
வெங்கடேஷ் போன்ற தளபதிகளும் புறப்பட்டுவிட்டார்கள் மஜகவை நோக்கி!!!
மார்ச்.30., மனிதநேய ஜனநாயக கட்சி ஒரு பூஞ்சோலையாக மாறி வருகிறது . பல்வேறு சமுதாய மக்களிடமும் தாக்கத்தை மஜக ஏற்படுத்தியிருக்கும் நிலையில் , இளைய தலைமுறையினர் கூட்டம் கூட்டமாக இணைந்து வருகின்றனர். நமது அரசியல் மறுமலர்ச்சி மாநாட்டில் ஐந்தில் ஒரு பகுதியினர் முஸ்லிம் அல்லாத சகோதர, சகோதரிகள் என்பது பெருமகிழ்ச்சியை தருகிறது. மாநாட்டிற்கு மக்களை தங்கள் சொந்த செலவில் அழைத்து வந்த பலருள் தம்பி வெங்கடேஷும் ஒருவர். நூற்றுக்கும் மேற்பட்டவர்களை அவர் அழைத்து வந்திருந்தார். அது போல் சென்னையில் I.T. துறையில் வேலை செய்யும் தம்பிகள் மணி மாறன், நேசக்குமார் போன்றவர்களும் வாகனங்களில் மாணவர்களையும், இளைஞர்களையும் திரட்டி வந்திருந்தனர். அதேப்போல லயோலா கல்லாரி மாணவர் செபாஸ்டின் தனது கல்லூரி நண்பர்களை வேனில் அழைத்து வந்திருந்தார். இவர்களை நினைக்கும்போது நெகிழ்ச்சியாக இருக்கிறது. இவர்களுக்கெல்லாம் மஜக அரசியல் தாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது . மற்ற தலைமைகளை புறக்கணித்துவிட்டு இவர்கள் மஜக-வின் தலைமையை அங்கீகரித்திருப்பது தமிழக பொதுவாழ்வில் ஆரோக்கியமான திருப்புமுனையாகும். நம்மை நம்பி பல்வேறு சமுதாயங்களை சேர்ந்த இளைஞர்களும் , மாணவர்களும் வருகிறார்களே என நினைக்கும்போது எமக்கு மிகுந்த பொறுப்புணர்வு ஏற்படுகிறது. சமூக நீதி,