ஆக.03.,நேற்று வனத்துறை மானியக்கோரிக்கை விவாதத்திற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்,பல மத கடவுள்களோடு முதல்வர் அவர்களை ஒப்பிட்டு பேசினார்.அதுபோல நபிகள் நாயகத்தையும் ஒப்பிட்டு பேசினார்.அப்போது முதல்வர் அவையில் இல்லை. உடனே முஸ்லீம் லீக் உறுப்பினர் அபூபக்கரும்,மஜக உறுப்பினர் தமிமுன் அன்சாரியும் இதற்க்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று முடிவு செய்து சபாநாயகரிடம் ஆட்சேபனையை தெரிவித்தனர். அந்த ஆட்சேபனையை ஏற்று அவற்றை அவைக்குறிப்பிலிருந்து நீக்குவதாக சபாநாயகர் கூறினார்.பிறகு அவை முடிந்ததும் அபூபக்கரும்,தமிமுன் அன்சாரியும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனிடம் அப்படி சொல்வது தவறு என்றும் ,அதை முஸ்லிம் சமுதாயம் ஏற்றுக் கொள்ளாது என்றும் விளக்கியதும்,அமைச்சர் அதை புரிந்துக் கொண்டு தன் தவறை ஏற்றுக் கொண்டார். இவ்விஷயத்தில் கூட்டணி அரசியல் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டு அபூபக்கரும்,தமிமுன் அன்சாரியும் இணைந்து செயல்பட்டது ஆரோக்கியமான அணுகுமுறையாகும். தகவல் :மஜக ஊடகபிரிவு
தமிழகம்
தமிழகம்
14ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்யுங்கள் .!
14ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்யுங்கள் .! #கண்ணீரும்_துயரமும்_வேதனையும்_கலந்த_வார்த்தைகளில்_பேசுவதாக_எடுத்துக்_கொள்ளுங்கள் .! #சட்ட_சபையில்_மஜக_பொதுச்செயலாளர்_M_தமிமுன்_அன்சாரி_MLA_உருக்கம் .! (சிறைத்துறை மானியக் கோரிக்கை மீது 02/08/2016 அன்று மனிதநேய_ஜனநாயக_கட்சியின்_பொதுச்_செயலாளர்_தமிமுன்_அன்சாரி அவர்கள் ஆற்றிய உரை). மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே ... சிறைச்சாலைகள் மானியக் கோரிக்கையில் பேச வாய்ப்பளித்தமைக்காக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தில் உள்ள 9 மத்திய சிறைகள் , பெண்களுக்கான 5 தனிச்சிறைகள் உட்பட 138 சிறைச்சாலைகள் உள்ளன . அங்கிருக்கும் கைதிகளின் நல வாழ்வுக்காக மாண்புமிகு முதல்வர் அம்மா அவர்களின் அரசு எடுத்து வரும் சிறப்பான திட்டங்களுக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். சிறைக் கூடங்களில் தொழிற்சாலைகளில் பணிபுரியும் சிறை வாசிகளுக்கு அவர்களது உழைப்பு மதிக்கும் வகையில் அவர்களுக்கான சம்பளத்தை கடந்த அக்டோபர் 2011 முதல் மாண்புமிகு முதல்வர் அம்மா அவர்களின் அரசு உயர்த்தியிருக்கிறது. இதற்கு முன்னர் நாள் ஒன்றுக்கு 60 ரூபாய் சம்பளம் பெற்ற ”செயல்திறன் பெற்றோர்” இப்போது 100 ரூபாய் பெறுகிறார்கள். நாள் ஒன்றுக்கு 50 ரூபாய் சம்பளம் பெற்ற " ஓரளவு செயல்திறன் பெற்றோர் " இப்போது 80 ரூபாய் பெறுகிறார்கள். நாள் ஒன்றுக்கு 45 ரூபாய் சம்பளம் பெற்ற " செயல்திறன் பெறாதவர்கள் " இப்போது
மஜகவின் திண்டுக்கல் மாவட்ட செயற்குழு கூட்டம்…
மனிதநேய ஜனநாயக கட்சி திண்டுக்கல் (கிழக்கு, மேற்கு) இணைந்த மாவட்ட செயற்குழு கூட்டம் இன்று மாலை 5 மணியளவில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தலைமை அலுவலகத்தில் கூடியது.... தலைமை: K.M. முகமது மைதீன் (உலவி) மாநில துணை பொதுச் செயலாளர் முன்னிலை: திண்டுக்கல் M.அன்சாரி மாநில துணை செயலாளர் கலந்துக்கொண்ட நிருவாகிகள்: A. ஹபிபுல்லா திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் U. மரைக்காயர் சேட் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட போருளாளர் C.A. சாந்து முகமது திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் A.M.சித்திக் ராஜா திண்டுக்கல் மேற்கு மாவட்ட பெருளாளர் S.A .மரிய திவாகரன் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட துணை செயலாளர் M. முகமது அனஸ் M.A.B.L., (வழக்கறிஞர்) திண்டுக்கல் கிழக்கு மாவட்ட துணை செயலாளர் S.ஹபிபுல்லா (இரயில்வே) திண்டுக்கல் கிழக்கு மாவட்ட துணை செயலாளர் ஆகியோர் கலந்துக் கொண்டனர் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன: 👉1. திண்டுக்கல் கிழக்கு மாவட்டத்தில் வரும் 27.08.16 (சனிக்கிழமை) நடைபெறும் "" பொதுக்கூட்டம்"" சிறப்படைய அதிகமான மக்களை அழைத்து வருவது என தீர்மானம். 👉2. திண்டுக்கல் கிழக்கு மாவட்டத்தில் பொதுக்குழு கூட்டம் வரும் 03.09.16 (சனிக்கிழமை) நடத்துவது என தீர்மானம். 👉3. திண்டுக்கல் மேற்கு மாவட்டத்தில் பொதுக்குழு கூட்டம் வரும் 5.09.16 (திங்கள்) நடத்துவது என தீர்மானம். 👉4. திண்டுக்கல் கிழக்கு,
திருப்பூரில் பள்ளிவாசல் பிரச்சினை முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்றது மஜக
திருப்பூரில் 15 வேலம்பாளையம் என்ற பகுதியில் உள்ள ஒரு பள்ளிவாசலுக்கு நீதிமன்ற உத்தரவு அடிப்படையில் பூட்ட வேண்டும் என்று RDO சார்பில் சொல்லப்பட்டிருக்கிறது.வெள்ளிக்கிழமை ஜூலை 29 ,மதியம் 3 மணிக்குப் பிறகு அது செயல்படக் கூடாது என சொல்லப்பட்டிருக்கிறது. பள்ளிவாசல் பதிவு அங்கீகாரம் சட்டப்படி இல்லை என்று, அப்பகுதி குடியிருப்பாளர்கள் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் இப்படி உத்தரவிட்டுள்ளதாக ,ஆதாரங்களின் அடிப்படையில் RDO கூறியிருக்கிறார். இதனை நேற்று சட்டசபைக்கு வந்து மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA விடம்,பள்ளிவாசல் முத்தவல்லி சேக் அமீர் தலைமையிலான குழு (9786125454) கூறியது. உடனே முதல்வர் அவர்களின் கவனத்திற்கு இப்பிரச்சினையை மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் அனுப்பி வைத்தார். நீதிமன்ற உத்தரவு என்றாலும் இது உணர்வுப்பூர்வமான ஒரு பிரச்சினை என்பதால், நடவடிக்கையை கைவிடுமாறு,பதில் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு அவகாசம் வழங்குமாறு கேட்டுக் கொண்டார். இதனிடையே இருபுறமும் உள்ள சிலர் இதை கவனமாக அனுகாமல்,உணர்வுகளை தூண்டும் வகையில் நடப்பதாக அதிகாரிகள் வருத்தப்பட்டனர். சில முஸ்லிம் அமைப்புகள் நீதிமன்ற உத்தரவை, ஏதோ அரசு செய்வதுப் போல சித்தரித்து கருத்துக்களை பரப்புவது என்ன நியாயம்? என்றனர். இதற்கு விளக்கமளித்த மஜக பொதுச்செயலாளர், முஸ்லிம்கள் தரப்பில் அப்பள்ளிவாசலில்
இன்று சட்டசபையில் மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் வைத்த கோரிக்கைகள்..
#மறைமலை_அடிகளின்_பெயரால்_தனித்தமிழ்_ஆராய்ச்சி_நிலையம்_வேண்டும்! #முஸ்லிம்கள்_இடஒதுக்கீட்டை_உயர்த்தி_தர_வேண்டும்! #நாகப்பட்டினம்_துறைமுகத்தை_ஆழ்கடல்_துறைமுகமாக_செயல்படுத்த_வேண்டும்! இன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் எம்.தமிமுன் அன்சாரி MA,MLA., பட்ஜெட் பொது விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பட்ஜெட்டை வரவேற்று பேசிய அவர் : "இது வரியில்லாத பட்ஜெட்; மக்களுக்கு வலி கொடுக்காத பட்ஜெட்; எதிர்தரப்புக்கு வழி கொடுக்காத பட்ஜெட்" என்று பேசியதும் பேரவை உறுப்பினர்கள் மேஜையை தட்டி வரவேற்றனர், பட்ஜெட்டில் பல்வேறு துறைகளுக்கும் நிதி ஒதுக்கீடு மிகுந்த மதிநுட்பத்தோடு செய்யப்பட்டு இருப்பாதாக கூறியவர், தனது தொகுதி கோரிக்கைகளையும் முன்வைத்தார். மறைமலை அடிகளார் பெயரில் ============================= ஆராய்ச்சி நிலையம் வேண்டும்: தமிழ் வளர்ச்சி துறைக்கு இந்த அரசு அறிவித்துள்ள திட்டங்களையும்,நிதி ஒதுக்கீட்டையும் வரவேற்றவர்,இது தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழாக்காலம். எனவே தனிதமிழுக்கு குரல் கொடுத்த, தமிழ் வரலாற்றின் வைரமாக திகழும் ஐயா.மறைமலை அடிகளார் பெயரால்,அவர் பிறந்த நாகப்பட்டினத்தில் நூலகத்துடன் கூடிய தனித்தமிழ் ஆராய்ச்சி மையத்தை அமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இலங்கை தமிழ் அகதிகள் நலன்: ========================= இலங்கை தமிழ் அகதிகளின் நலனுக்காக தமிழக அரசு செய்து வரும் திட்டங்களையும், நிதி ஒதுக்கீட்டையும் வரவேற்றவர் ,இது உலகமெங்கும் தேசத்தை கடந்த நதிகளாய் வாழும் ஈழத் தமிழர்களுக்கு ஒர் நற்செய்தி என்று பாரட்டினார். மாண்புமிகு முதல்வர் அம்மா அவர்களின் அரசு, ஈழத் தமிழர்கள் மீது