நாகர்கோவில்!! MJTS-யின் சரக்கு வாகன நிலையம் திறப்பு விழா!!

மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பு அமைப்பான மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கம் (MJTS) கன்னியாகுமரி மாவட்டம் சார்பில் நாகர்கோவில் இளங்கடை பகுதியில் புதிய சர௧்கு வாகன நிறுத்தம் திறப்பு விழா நிகழ்ச்சி மாவட்ட செயலாளர் பீஜூருள் ஹபீஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதில் சரக்கு வாகன நிறுத்தத்தை தொழிற்சங்க மாவட்ட செயலாளர் S.முகமது ராபி அவர்கள் திறந்து வைத்து வாழ்த்துரை வழங்கினார்.

இந்நிகழ்வில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட பொருளாளர் சாதிக் அலி, மாவட்ட துணைச் செயலாளர்கள் முஜீப் ரஹ்மான், அமீர்கான், ஐயப்பன் மாவட்ட இளைஞரணி செயலாளர் அஷ்ரப் அலி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் கே.எஸ் ரபீக், மாவட்ட மீனவர் அணி செயலாளர் அந்தோணி அலங்காரம், மாநகரச் செயலாளர் மாகீன் இப்ராகிம், இளைஞர் அணி மாநகர துணை செயலாளர், அபுதாஹிர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்வில் மாவட்ட, பகுதி, கிளை கழக நிர்வாகிகள், மற்றும் சரக்கு வாகன ஓட்டுனர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் இறுதியில் தொழிற்சங்க மாநகர செயலாளர் சேக் மைதீன், அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.