மமக ஊராட்சி மன்ற உறுப்பினர் தலைமையில் திரளான மமகவினர். மஜகவில் இணைந்தனர்..!

மனிதநேய ஜனநாயக கட்சியின் சேவை அரசியலின் பால் ஈர்க்கப்பட்டு கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம், ஓசூர் மாநகரம், பத்தலபள்ளியில்…

மமக ஒன்றிய செயலாளரும், ஊராட்சி மன்ற உறுப்பினருமான முகம்மது அலி தலைமையில் மமக கிளை தலைவர் செய்யத் உட்பட நிர்வாகிகள் கூண்டோடு அக்கட்சியில் இருந்து விலகி மஜக தலைமை செயற்குழு உறுப்பினர் ஓசூர் நவ்ஷாத் முன்னிலையில் மஜக-வில் இணைந்தனர்.

புதிதாக இணைந்தவர்கள் “மக்களுடன் மஜக 2023” நிகழ்வை வீரியமுடன் முன்னெடுப்போம் என்று சூளுரைத்தனர்.

இந்நிகழ்வின் போது மஜக மாவட்ட செயலாளர் முஹம்மத் ஆரிப், துணை செயலாளர் சர்தார், ஓசூர் மாநகர செயலாளர் முஹம்மத் உமர், பொருளாளர் அப்துல் வஹாப், அன்சர், பத்தலபள்ளி பாஷா, மஹபூப், ஜலால், ஷெரீப், உட்பட நிர்வாகிகள் உடனிருந்தனர்.