மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொதுச்செயலாளரும் நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினருமான M.தமிமுன் அன்சாரி MA.,M.LA அவர்கள் நேற்று திருவண்ணாமலையில் பல்வேறு நிகழ்ச்சிகளை முடித்து விட்டு கடலூர் வடக்கு மாவட்டம் நெய்வேலி நகருக்கு இரவு 9 மணி அளவில் வருகை தந்தார்கள். அவர்களுடன் மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜீதீன் அவர்கள், நாகை மாவட்ட முன்னாள் மாவட்ட செயலாளர் செய்யது முபாரக் ஆகியோர் வருகை புரிந்தனர். கடலூர் மாவட்ட செயலாளர் N.இப்ராகிம், மாநில செயற்க்குழு உறுப்பினர் P.ஷாஜகான் ஆகியோர் தலைமையில் நெய்வேலி நகர நிர்வாகம் சார்பாக சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி அவர்களை அ.தி.மு.க நகர கழக செயலாளரும், நகர் மன்ற தலைவருமான திரு.K.மனோகர் அவர்கள், திராவிட தொண்டு மைய தலைவரும், வர்த்தக சங்க தலைவருமான திரு.R.PS. பன்னீர் செல்வம் அவர்கள், அரிமா சங்க தலைவர் திரு.C.லட்சுமிநாராயணன் அவர்கள், அரிமா சங்க செயலாளரும் M.R.சரீப் அறக்கட்டளை தலைவரும்மான Ln. R.அன்வர்தீன்அவர்கள், அ.தி.மு.க மாவட்ட ஓட்டுனர் அணி துணை செயலாளர் திரு.பாலு அவர்கள், அ.தி.மு.க.மாநில பொதுக்குழு உறுப்பினர் திரு. A.நாசர் அவர்கள், மந்தாரக்குப்பம் மஸ்ஜிதே ரஹ்மத் பள்ளிவாசலின் துணை செயலாளரும் அர்-ரகமத் பள்ளின் தாளாரும்மான ஹாஜி.நஸ்ருல்லா அவர்கள்,
தமிழகம்
தமிழகம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் மஜகவின் ஜமாத் சந்திப்பு!
திருவண்ணாமலையில் மஜக நிர்வாகியின் திருமணத்தில் கலந்துகொள்வதற்காக வருகை தந்த மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பல்வேறு ஜமாத்துகளை சந்தித்தார். அவருடன் பொருளாளர் S.S.ஹாரூன் ரசீத்,அவைத் தலைவர் S.S.நாசர் உமரி, மாநில செயலாளர்கள் N.A.தைமியா, நாச்சிகுளம் தாஜுதீன் ஆகியோர்களும் வருகை தந்தனர். திருவண்ணாமலை நகர செயலாளர் S.முஹம்மத் ரபீக் அவர்களின் திருமணத்தில் கலந்துகொண்டு மணமக்களை மாநில நிர்வாகிகள் வாழ்த்தினார்கள். பிறகு திருவண்ணாமலை மற்றும் செங்கம் மஹல்லா ஜமாத்துகளை சந்தித்து பொதுசிவில் சட்டத்துக்கு எதிராக நடைபெறும் கையெழுத்து இயக்கத்திற்கு ஆதரவு திரட்டப்பட்டது. அதன் பிறகு கடலூர் வடக்கு மாவட்டம் மங்கலம்பேட்டைக்கு வருகை தந்த பொதுச்செயலாளர் அவர்களுக்கு மஜக சார்பில் வரவேற்பளிக்கப்பட்டது. பிறகு நெய்வேலியில் ஏற்பாடு செய்யப்பட்ட சந்திப்பில் ஜமாத் பிரமுகர்களையும், அனைத்து கட்சி நண்பர்களையும் சந்தித்து உரையாடினார். பின்னர் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. தகவல்; மஜக_ஊடகப்பிரிவு
அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தலைவர் தமிமுன் அன்சாரி தந்தி டிவி பாண்டே பாராட்டு…
நேற்று மதுரையில் தந்தி தொலைகாட்சி சார்பில் பொது சிவில் சட்டம் என்ற தலைப்பில் மக்கள் மன்றம் நிகழ்ச்சிக்கான ஒளிப்பதிவு பரபரப்பான சூழலில் நடைபெற்றது. சி.பி.ராதாகிருஷ்ணன் (BJP), M.தமிமுன் அன்சாரி MLA (MJK), சுதர்சன நாச்சியப்பன் (காங்), ஆசிர்வாதம் ஆச்சாரியா (RSS), சமூக செயல்பாட்டாளர்கள் பாதிரியார் ஜெகத் கஸ்பர், வழக்கறிஞர் சுதா ராமலிங்கம் ஆகியோர் பங்கேற்றனர். பதட்டமான தலைப்பு என்பதால் உளவுத்துறை ஏக டென்ஷனில் இருந்தது. அரங்கத்தில் தனி அறைக்கு பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி சென்றதும், பாண்டே அவர்கள் கட்டிப்பிடித்து, MLA ஆனதற்கு வாழ்த்து கூறினார். அவரது அரசியல் நகர்வுகள் குறித்து பாராட்டினார். அப்போது அங்கிருந்த ஜெகத் கஸ்பர், உங்கள் பணிகளை அன்றாடம் சோசியல் மீடியாவில் கவனிக்கிறேன். சிறப்பாக செயல்படுகிறீர்கள் என பொது செயலாளரிடம் கூறினார். நிகழ்ச்சி தொடங்கிய போது பொதுச் செயலாளருக்கு அறிமுகம் கொடுத்த பாண்டே, தான் முன்பு இருந்த கட்சிக்கு MLA இல்லாமல் செய்வது எப்படி? இப்போது தான் இருக்கும் கட்சிக்கு MLA வை எப்படி பெற்று கொடுப்பது என்ற வித்தையை கற்றவர் என்றதும் கைதட்டல் எழுந்தது. முஸ்லிம் சமூகத்தில் மட்டுமல்லாது, பொது மக்களிடமும் ஆதரவை பெற்றவர். அம்மா அவர்களின் அன்பை
ஈரோடு மாநகர் மாவட்டம் சார்பில் பொதுசிவில் சட்டத்திற்கு எதிராக மஜக நடத்தும் கையெழத்துப் போர் துவக்கம்…
ஈரோடு மாநகர் மாவட்டம், சுல்தான் பேட்டை பள்ளி வாசலில் பொதுசிவில் சட்டத்தை அமல்படுத்த துடிக்கும் மத்திய அரசுக்கு எதிராக மனிதநேய ஜனநாயக கட்சி நடத்தும் கையெழத்துப் போர் 21.20.2016 முதல் 4.11.2016 வரை மக்களை சந்திப்போம் நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் A.ஷபிக் அலிதலைமை தாங்கி தொடங்கி வைத்தார் . மாவட்ட துணை செயலாளர் சாகுல் ஹமீது,முஸ்தபா மற்றும் மாவட்ட அரசு காஜி ஹாஜி கிபாயத்துல்லாஹ் பாகவி,பள்ளி இமாம் அப்துல் சமது ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் முகமது அலி வரவேற்புரையாற்றினார். நிகழ்ச்சியில் கிளை பொருப்பாளர்கள்,ஊர் ஜமாத்தார்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர். இறுதியில் மாணவர் இந்தியா மாவட்ட செயலாலர் ஜாபர் நன்றி கூற நிகழ்ச்சி நிறைவுற்றது. தகவல்: மஜக ஊடகபிரிவு ஈரோடு மாநகர் மாவட்டம்