நேற்று தஞ்சாவூரில் அதிமுக வேட்பாளர் ரங்கசாமி அவர்களுக்கு வாக்கு கேட்டு மஜக பொதுச்செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA, அவர்கள் காலை முதல் பிரச்சாரம் மேற்கொண்டார். அவருடன் துணை பொதுச்செயலாளர் மதுக்கூர் ராவுத்தர்ஷா, மாநில செயலாளர்கள் நாச்சிக்குளம் தாஜூதீன், ராசுதீன், மாவட்ட செயலாளர் அகமது கபீர், பொருளாளர் ஜப்பார், மாவட்ட துணை செயலாளர் ஷேக், தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் காதர் பாட்ஷா, மனிதநேய வணிகர் சங்க மாநில செயலாளர் யூசுப் ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர். காலையில் தஞ்சை மாநகரின் பல்வேறு பகுதிகளுக்கு திறந்த ஜீப்பில் சென்று பொதுச்செயலாளர் அவர்கள் வாக்கு சேகரித்தார். மாலை 6:30 க்கு வல்லம் நகரில் பெருந்திரளான கூட்டத்திற்கு மத்தியில் வாக்கு சேகரித்தார்கள். பிறகு 8:30 க்கு கீழவாசலில் பிரச்சாரம் செய்தார். முன்னதாக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி அவர்களை, முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் MP, வேளாண்மை துறை அமைச்சர் துரைகண்ணு, கைத்தறி துறை அமைச்சர் O.S மணியன், தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் பரசுராமன், பேராவுரணி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தராஜ் ஆகியோர் சந்தித்து தொகுதி நிலவரம் குறித்து கலந்துரையாடினர். மேலும் இத்தொகுதியில் மஜக வின் களப்பணிகள் குறித்தும் பாராட்டு தெரிவித்தனர். தகவல்; மஜக ஊடக
தமிழகம்
தமிழகம்
தஞ்சை தொகுதியில் மஜக பொதுச்செயலாளர் அனல் பறக்கும் பிரச்சாரம்!
நேற்று தஞ்சாவூரில் அதிமுக வேட்பாளர் ரங்கசாமி அவர்களுக்கு வாக்கு கேட்டு மஜக பொதுச்செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA, அவர்கள் காலை முதல் பிரச்சாரம் மேற்கொண்டார். அவருடன் துணை பொதுச்செயலாளர் மதுக்கூர் ராவுத்தர்ஷா, மாநில செயலாளர்கள் நாச்சிக்குளம் தாஜூதீன், ராசுதீன், மாவட்ட செயலாளர் அகமது கபீர், பொருளாளர் ஜப்பார், மாவட்ட துணை செயலாளர் ஷேக், தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் காதர் பாட்ஷா, மனிதநேய வணிகர் சங்க மாநில செயலாளர் யூசுப் ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர். காலையில் தஞ்சை மாநகரின் பல்வேறு பகுதிகளுக்கு திறந்த ஜீப்பில் சென்று பொதுச்செயலாளர் அவர்கள் வாக்கு சேகரித்தார். மாலை 6:30 க்கு வல்லம் நகரில் பெருந்திரளான கூட்டத்திற்கு மத்தியில் வாக்கு சேகரித்தார்கள். பிறகு 8:30 க்கு கீழவாசலில் பிரச்சாரம் செய்தார். முன்னதாக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி அவர்களை, முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் MP, வேளாண்மை துறை அமைச்சர் துரைகண்ணு, கைத்தறி துறை அமைச்சர் O.S மணியன், தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் பரசுராமன், பேராவுரணி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தராஜ் ஆகியோர் சந்தித்து தொகுதி நிலவரம் குறித்து கலந்துரையாடினர். மேலும் இத்தொகுதியில் மஜக வின் களப்பணிகள் குறித்தும் பாராட்டு தெரிவித்தனர். தகவல்; மஜக ஊடக
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் பிரச்சாரம் மஜக பொதுச்செயலாளர் வருகை…
எதிர் வரும் 16.11.2016 அன்று மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் அ.இ.அ.தி.மு.க வேட்பாளர் A.K. போஸ் அவர்களை ஆதரித்து ம.ஜ.க பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி MLA அவர்கள் சூறாவளி பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார். அது சம்பந்தமாக அ.இ.அ.தி.மு.க தொகுதி தலைமை காரியாலயத்தில், அ.இ.அ.தி.மு.க பொறுப்பாளர்களிடம், ம.ஜ.க துணைப் பொதுச் செயலாளர் K.M. முகம்மது மைதீன் உலவி, கொள்கை பரப்புச் செயலாளர் மன்னை.செல்லச்சாமி, வடக்கு மாவட்ட செயலாளர் சேக் அகமது அப்துல்லா, பொருளாளர் புதூர் சாலி, தெற்கு மாவட்ட பொருளாளர் மைதீன் பாபு, முன்னாள் தெற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் யாசிர் ஆகியோர் சந்தித்து திட்டமிடல் வகுக்கப்பட்டு, பொதுச் செயலாளர் அவர்களின் பிரச்சார நிகழ்வை சிறப்பாக நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. தகவல் திருப்பரங்குன்றம் தேர்தல் பணிக்குழு மனிதநேய ஜனநாயக கட்சி
அனைத்து பள்ளிவாசல் கூட்டமைப்பு சார்பாக பொதுசிவில் சட்ட விளக்க பொதுக்கூட்டம் மஜக பொருளாலர் பங்கேற்பு!
திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் 8.11.16 அன்று மாலை ஆவடி பெரு நகராட்சி அனைத்து பள்ளிவாசல் சார்பாக மத்திய அரசு கொண்டு வர நினைக்கும் பொது சிவில் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பொது கூட்டம் நடை பெற்றது. இப்பொது கூட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் S.S.ஹாரூண் ரஷீத், காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் Ex.mp, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுச்செயலாளர் K.A.M.அபுபக்கர் M.L.A, இந்திய தவ்ஹீத் ஜமாத் மாநில தலைவர் S.M.பாக்கர், S.D.P.I.மாநில தலைவர் தெஹ்லான் பாஃகவி, மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் P.அப்துல் சமத், சமூக ஆர்வலர் S.மசூதா ஆலிமா ஆகியோர் கலந்து கொண்டனர். இப்பொது கூட்டத்திற்கு அனைத்து பள்ளிவாசல் கூட்டமைப்பு செயலாளர் A.ஹம்சா தலைமை வகித்தார். அனைத்து பள்ளிவாசல் கூட்டமைப்பு தலைவர் ஹாஜி.S.சர்புதீன் முன்னிலை வகித்தார் . தகவல்: மஜக ஊடக பிரிவு திருவள்ளூர் மாவட்டம்.
இது சீர்திருத்தமா? திசை திருப்பும் நடவடிக்கையா?
(மஜக பொதுச்செயலாளர் வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை) பொதுசிவில் சட்ட சர்ச்சைகளும், விவசாயிகள் தற்கொலைகளும், போபால் என்கவுண்டர் சர்ச்சைகளும், புதிய கல்வி கொள்கை குறித்த விமர்சனங்களும், நாட்டை உலுக்கி இருக்கும் நிலையில் அதையெல்லாம் திசை மாற்றும் வகையில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மோடியின் மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இதற்கு, கருப்பு பணத்தை ஒழிக்கிறோம் என வண்ணமயமான காரணங்களை கூறியிறுக்கிறார்கள். வெளிநாட்டில் உள்ள இந்தியர்களின் கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொரு இந்தியரின் வங்கி கணக்கிலும் தலா 15 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என்ற மோடியின் தேர்தல் வாக்குறுதி இப்போது மறக்கடிக்கப்பட்டுறிக்கிறது. நாட்டில் கருப்பு பணத்தை பதுக்கியிருப்பவர்கள் 10 சதவீதம் பேர்தான் எனும் நிலையில், அவர்கள் அதை சொத்துக்களாகவும், தங்கம் போன்ற மதிப்புமிக்க பொருட்களாகவும்தான் வைத்திருப்பார்கள். எல்லோரும் 500,1000 ரூபாய் நோட்டுகளாகதான் வைத்திருப்பார்கள் என்பது என்ன நிச்சயம்? பிரதமர் மோடியின் அறிவிப்பால் நடுத்தர மக்கள் மிகவும் நெருக்கடிகளுக்கு உள்ளாகியிருக்கிறார்கள். சிறு, குறு, நடுத்தர வணிகர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியிருக்கிறார்கள். குறைந்த பட்சம் 1 வார கால அவகாசமாவது கொடுத்திருக்கலாம் என்ற மக்களின் குரல்களை நாடெங்கும் கேட்க முடிகிறது. திருமணம், புதுவீடு என பல கனவுகளோடு வீட்டில் பணத்தை சேமித்து