அனைத்து பள்ளிவாசல் கூட்டமைப்பு சார்பாக பொதுசிவில் சட்ட விளக்க பொதுக்கூட்டம் மஜக பொருளாலர் பங்கேற்பு!

image

image

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் 8.11.16 அன்று மாலை ஆவடி பெரு நகராட்சி அனைத்து பள்ளிவாசல் சார்பாக மத்திய அரசு கொண்டு வர நினைக்கும் பொது சிவில் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பொது கூட்டம் நடை பெற்றது.

இப்பொது கூட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் S.S.ஹாரூண் ரஷீத், காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் Ex.mp, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுச்செயலாளர் K.A.M.அபுபக்கர் M.L.A, இந்திய தவ்ஹீத் ஜமாத் மாநில தலைவர் S.M.பாக்கர், S.D.P.I.மாநில தலைவர் தெஹ்லான் பாஃகவி,
மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் P.அப்துல் சமத்,
சமூக ஆர்வலர் S.மசூதா ஆலிமா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இப்பொது கூட்டத்திற்கு அனைத்து பள்ளிவாசல் கூட்டமைப்பு செயலாளர் A.ஹம்சா தலைமை வகித்தார். அனைத்து பள்ளிவாசல் கூட்டமைப்பு தலைவர் ஹாஜி.S.சர்புதீன் முன்னிலை வகித்தார் .

தகவல்:
மஜக ஊடக பிரிவு
திருவள்ளூர் மாவட்டம்.