தஞ்சை தொகுதியில் மஜக பொதுச்செயலாளர் அனல் பறக்கும் பிரச்சாரம்!

image

image

image

நேற்று தஞ்சாவூரில் அதிமுக வேட்பாளர் ரங்கசாமி அவர்களுக்கு வாக்கு கேட்டு மஜக பொதுச்செயலாளர்
M. தமிமுன் அன்சாரி MLA, அவர்கள் காலை முதல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அவருடன் துணை பொதுச்செயலாளர் மதுக்கூர் ராவுத்தர்ஷா, மாநில செயலாளர்கள் நாச்சிக்குளம் தாஜூதீன், ராசுதீன், மாவட்ட செயலாளர் அகமது கபீர், பொருளாளர் ஜப்பார், மாவட்ட துணை செயலாளர் ஷேக், தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் காதர் பாட்ஷா, மனிதநேய வணிகர் சங்க மாநில செயலாளர் யூசுப் ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

காலையில் தஞ்சை மாநகரின் பல்வேறு பகுதிகளுக்கு திறந்த ஜீப்பில் சென்று பொதுச்செயலாளர் அவர்கள் வாக்கு சேகரித்தார்.

மாலை 6:30 க்கு வல்லம் நகரில் பெருந்திரளான கூட்டத்திற்கு மத்தியில் வாக்கு சேகரித்தார்கள். பிறகு 8:30 க்கு கீழவாசலில் பிரச்சாரம் செய்தார்.

முன்னதாக பொதுச்செயலாளர்
தமிமுன் அன்சாரி அவர்களை, முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் MP, வேளாண்மை துறை அமைச்சர் துரைகண்ணு, கைத்தறி துறை அமைச்சர்
O.S மணியன், தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் பரசுராமன், பேராவுரணி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தராஜ் ஆகியோர் சந்தித்து தொகுதி நிலவரம் குறித்து கலந்துரையாடினர்.
மேலும் இத்தொகுதியில் மஜக வின் களப்பணிகள் குறித்தும் பாராட்டு தெரிவித்தனர்.

தகவல்;
மஜக ஊடக பிரிவு
தஞ்சை மாநகர் மாவட்டம்.