சென்னை.ஏப்.13., காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும், ஸ்டெர்லைட் ஆலயை மூட கோரியும் தமிழ்நாடு ஆம் ஆத்மி கட்சி சார்பாக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழர் முன்னணி அமைப்பின் தலைவர் அய்யா பழ.நெடுமாறன், மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA, தமிழ்நாடு கொங்கு இளைஞர்ப் பேரவையின் நிறுவனத்தலைவர் தனியரசு MLA ஆகியோர் கலந்து கொண்டு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து உரையாற்றினர். இவர்களுடன், மஜக மாநிலச் செயலாளர் தைமிய்யா மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_தலைமையகம்_சென்னை
தமிழகம்
தமிழகம்
காவல்துறையை உடனே விடுதலை செய்..!
பழனிபாபா நூல் வெளியீட்டு விழா..! மஜக மாநில பொருளாளர் பங்கேற்பு..!!
சென்னை.பிப்.26., இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம் ஒருங்கிணைக்கும் ஒடுக்கப்பட்டவர்களின் "பெருங்கனவு" பழனி பாபா வாழ்வும் போரட்டாமும் என்ற நூல் வெளியீட்டு விழாவும் மற்றும் சமூக செயல்பாட்டாளர்களுக்கு சிறப்பு விருது வழங்கும் விழா நேற்று மாலை 5.00 மணியளவில் சென்னை மயிலாப்பூரில் உள்ள கவிக்கோ அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் கலந்து கொண்டு பேசுகையில்.. பழனிபாபா இஸ்லாமிய சமுதாயத்திற்காக மட்டும் போராடவில்லை, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, அனைத்து தமிழின மக்களுக்காகவும் போராடினார். ஈழத்தமிழர் பிரச்சனைக்கு வலுவாக குரல் கொடுத்தார், பெங்களூரில் தமிழர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் ஒன்றை வாணியம்பாடியில் நடத்தினார். பழனி பாபா மரணிக்கும் காலத்தில் ஜிகாத் கமிட்டியை சமுதாய அமைப்பாக மாற்றி விட்டு அனைவருக்கும் பொதுவான ஒரு அரசியல் கட்சியை தொடங்க விரும்பினார். அவர் விரும்பியதை தற்போது மனிதநேய ஜனநாயக கட்சி செய்து வருகிறது என்று குறிபிட்டார்கள். விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் பழனிபாபா வாழ்வும் போராட்டமும் நூலை வெளியிட அதை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் பெற்று கொண்டார். பல்வேறு இயங்கங்களின் தலைவர்களும் இந்நிகழ்வில் பங்குபெற்று
மத்திய சென்னை கிழக்கு மாவட்ட மஜக சார்பில் மூன்றாம் ஆண்டு துவக்க விழா தொடர்பான ஆலோசனை கூட்டம்…!
சென்னை.பிப்.24., எதிர் வரும் பிப்ரவரி 28ஆம் தேதி மனிதநேய ஜனநாயக கட்சியின் (மஜக) மூன்றாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு மஜக மத்திய சென்னை கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக மாவட்ட பொருப்பாளர் & மாநிலச் செயலாளர் N.A. தைமிய்யா அவர்கள் பங்கேற்று கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை வழங்கினார். இதில் மாவட்டச் செயலாளா் A.முஹம்மது ஹாலித், மாவட்ட பொருளாளா் பிஸ்மி, மாவட்டத் துணை செயலாளா்கள் பீர் முஹம்மது, அப்பாஸ், அணி செயலாளா்கள் மூஸாகனி, யூசுப், காஜா ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் மாவட்டம் முழுவதும் கொடி ஏற்றுதல், தெருமுனை கூட்டம், இரத்த தான முகாம்கள், கிளைகளை அதிகப்படுத்துதல், விரைவில் மாவட்டப் பொதுக்குழு நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது. தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_மத்திய_சென்னை_கிழக்கு_மாவட்டம்
தென் சென்னை மே மாவட்டம் மஜக கொடியேற்றுதல் நிகழ்ச்சி…! பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA ஏற்றிவைத்தார்…!!
சென்னை.பிப்.,23., மனிதநேய ஜனநாயக கட்சியின் மூன்றாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு முன்னோட்டமாக தென் சென்னை மேற்கு மாவட்டம் சார்பாக கோடம்பாக்கம் பள்ளி வாசல் அருகில், வரதராஜன் பேட்டை மாநகராட்சி பள்ளி அருகில், கங்கையம்மன் கோயில் தெரு, 100 அடிசாலை மற்றும் திருநகர் சந்திப்பு ஆகிய நான்கு இடங்களில் மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் கொடியெற்றி, சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் தென்சென்னை மாவட்ட செயலாளர் தலைமை வகித்தார், மாநில செயலாளர் சீனிமுஹம்மது அவர்களும் மாநில கொள்கை விளக்கப் பேச்சாளர் மீரான் அவர்களும் மாநில வணிகர்அணி துணை செயலாளரட கலீம் அவர்களும் முன்னிலை வகித்தனர். இதில் தென்சென்னை மேற்கு மாவட்ட துணை செயலாளர்கள் அப்துல் வசீம் மற்றும் அப்துல் காதர், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் முஹம்மது ஜீயா, மற்றும் தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை செயலாளர் முஹம்மது அப்துல் ரஹ்மான், மற்றும் வடபழனி நாராயணன் ஆகியோர் நிகழ்ச்சியை சிறப்பாக ஒருங்கிணைத்து நடத்தினர். மேலும் இந்நிகழ்வில் மத்திய சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் முஹம்மது இப்ராஹிம், மாவட்ட பொருளாளர் அன்வர் இப்ராஹிம், மாவட்ட