ஆகஸ்ட்.20., மனிதநேய ஜனநாயக கட்சியின் கன்னியாகுமரி மாவட்ட சிறப்பு நிர்வாகக்குழு கூட்டம் மாவட்டச் செயலாளர் பிஜ்ருள் ஹபீஸ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட அலுவலகம் திறப்பது, கட்சி வளர்ச்சிப் பணிகள் மற்றும் தீவிர உறுப்பினர் சேர்க்கை போன்ற முக்கிய தீர்மானங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட துணைச் செயலாளர்கள் சாதிக் அலி, முஜீப் ரஹ்மான், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் பாவலர் ரியாஸ், மாநகர செயலாளர் அமீர்கான், மாநகர பொருளாளர் ஐயப்பன் உள்ளிட்ட அணி செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #கன்னியாகுமரி_மாவட்டம் 19-08-2020
இஸ்லாமிய கலாச்சார பேரவை
முன்னாள் அமைச்சர் ரஹ்மான்கான் மரணம்!மஜக தலைமை ஒருங்கிணைப்பாளர் மெளாலா நாசர் நேரில் சென்று மரியாதை!
ஆகஸ்ட்.20., திமுக பிரமுகரும், முன்னாள் அமைச்சருமான ரஹ்மான்கான் உடல் வைக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மௌலா.நாசர் அவர்கள் நேரில் சென்று மரியாதை செலுத்தினார். அவரது மகன்கள் பொறியாளர் ரியாஸ், டாக்டர் ஜூபேர் ஆகியோரை சந்தித்து மஜக சார்பில் ஆறுதலை தெரிவித்தார். தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING 20-08-2020
முன்னாள் அமைச்சர் ரஹ்மான் கான் மரணம்! மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA இரங்கல்!
திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான ரஹ்மான்கான் மரணமடைந்தார் என்ற செய்தி ஆழ்ந்த வேதனையளிக்கிறது. மாணவர் அரசியலில் களமாடி, ஆதிக்க இந்திக்கு எதிராக போராடியவர். பெரியார், அண்ணா போன்ற தலைவர்களால் பாராட்டப் பெற்று, கலைஞர் அவர்களின் நேசத்திற்குரிய உடன்பிறப்பாய் திகழ்ந்தவர். சிறந்த எழுத்தாளராகவும், பேச்சாளராகவும் வலம் வந்தவர். ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராகவும், ஒரு முறை அமைச்சராகவும் திறம்பட பணியாற்றியவர். எதிர்கட்சி உறுப்பினராய் பணி புரிந்த காலங்களில் சட்டசபையில் 'இடி' முழக்கம் எழுப்பியவர் என்பதும், அமைச்சராய் பணி புரிந்தப் போது அடக்கத்துடன் செயலாற்றியவர் என்பதும் அவரது சிறப்புகளாகும். நான் புதுக்கல்லூரியில் பயின்ற போது, 1996-ஆம் ஆண்டு விடுதி நாள் விழாவுக்கு வருகை தந்தார். அன்று அவர் ஆற்றிய உரை கம்பீரமாய் இருந்தது. பார்க்கும் இடங்களில் எல்லாம் பளீர் சிரிப்பை வெளிக்காட்டுவது அவரது இயல்பாகும். அவருடன் உரையாடும் போது அரசியல் விஷயங்களை கற்றுக் கொள்ள முடியும். உலக நிகழ்வுகள், வரலாற்று அறிவு என அவரது பேச்சில் தகவல்கள் நிறைந்திருக்கும். இன்று திராவிட முன்னேற்றக் கழகம் ஆற்றல் மிகு கொள்கையாளரை இழந்திருக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், திராவிட முன்னேற்றக் கழகத்தினருக்கும் மனிதநேய ஜனநாயக
குடியாத்தம் நகராட்சி பொறுப்பு ஆணையரிடம் மஜக மனு..!
ஆகஸ்ட்.19., வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சி பொறுப்பு ஆணையர் சிசில் தாமஸ் அவர்களிடம் அடிப்படை வசதி வேண்டி மனிதநேய ஜனநாயக கட்சியின் குடியாத்தம் நகரச் செயலாளர் எஸ்.அனீஸ் அவர்கள் கோரிக்கை மனு அளித்தார். மனுவில் கூறியிருப்பதாவது.. குடியாத்தம் நகரம் 8-வது வார்டு அசேன் தெரு, சக்தி நகர், ஆகிய பகுதிகளில் புதிய தார் சாலைகள் அமைத்து வேண்டியும், குடியாத்தம் நகரம் 8- வது வார்டு அசேன் தெரு, சக்தி நகர், பகுதிகளில் மழைக்காலத்தில் மழைநீர் வெள்ளம்போல் தேங்குகிறது அதனை சீர்செய்ய புதிய கழிவு நீர் கால்வாய்கள் அமைத்து தர வேண்டியும், 36-வது வார்டு தங்கம் நகர் ராகவேந்திரா தெரு, கழிவுநீர் கால்வாய்கள் அமைத்து தர வேண்டியும், குடியாத்தம் நகரத்தில் சுற்றியுள்ள 36-வார்டுகளிலும் மழைக்காலம் என்பதால் கழிவுநீர்க் கால்வாய்களை தூர்வார வேண்டியும். மேற்கண்ட கோரிக்கைகள் அனைத்தும் தாங்கள் நேரில் ஆய்வு பணிகள் செய்து, மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இச்சந்திப்பில் மாவட்டப் பொருளாளர் I.S.முனவ்வர் ஷரிப், 2-வார்டு கிளை செயலாளர் மஸ்தான், சக்தி நகர் சேர்ந்த மல்லிகா ஆகியோர் உடனிருந்தனர். தகவல் ; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #வேலூர்_மாவட்டம் 18.08.2020
நேரடி வேலை இழந்துள்ளோருக்கு உதவிடும் கையெழுத்து இயக்கத்திற்கு ஆதரவு!மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA
கொரோனா நெருக்கடி காரணமாக நாடு முழுக்க தினக்கூலிகளாக வாழும் மக்கள் வேலையிழந்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் நடத்திய ஆய்வில் 12.2 கோடி பேர் வேலை இவ்வாறு இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக, பல வகையிலும் அல்லல்பட்டு வரும் இவர்களுக்கு, மத்திய அரசு மாதம் 6 ஆயிரம் ரூபாய் என கணக்கிட்டு உதவித் தொகையை அவர்களின் வங்கி கணக்கில் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, பல்வேறு தொண்டு இயக்கங்களை பிரதிபலிக்கும் "தமிழ்நாடு அலையன்ஸ்" சார்பில் கையெழுத்து இயக்கம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. உழைப்பாளிகளின் உரிமைகளை முன்னிறுத்தி,ஆகஸ்ட் 14 முதல் ஆகஸ்ட் 31, 2020 வரை இக் கையெழுத்து இயக்கம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. (தொடர்புக்கு.. 9444976932, 72004 81878) இதற்கு தகுதியானவர்களை ரேஷன் அட்டை, ஆதார் அட்டை, அமைப்பு சார நல வாரியங்களின் தரவுகள், உள்ளாட்சி அமைப்புகளின் தகவல்கள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு மத்திய அரசு தீர்மானிக்க வேண்டும் என்ற இவர்களது கோரிக்கை முற்றிலும் நியாயமானது. இக்கோரிக்கையை மனிதநேய ஜனநாயக கட்சி ஆதரிப்பதோடு, அனைவரும் இதற்கு ஆதரவாக கையெழுத்திட்டு இக்கோரிக்கையை வலுப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம். இவண், #மு_தமிமுன்_அன்சாரி_MLA, #பொதுச்செயலாளர், #மனிதநேய_ஜனநாயக_கட்சி 19.08.2020