நேரடி வேலை இழந்துள்ளோருக்கு உதவிடும் கையெழுத்து இயக்கத்திற்கு ஆதரவு!மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA

கொரோனா நெருக்கடி காரணமாக நாடு முழுக்க தினக்கூலிகளாக வாழும் மக்கள் வேலையிழந்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் நடத்திய ஆய்வில் 12.2 கோடி பேர் வேலை இவ்வாறு இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக, பல வகையிலும் அல்லல்பட்டு வரும் இவர்களுக்கு, மத்திய அரசு மாதம் 6 ஆயிரம் ரூபாய் என கணக்கிட்டு உதவித் தொகையை அவர்களின் வங்கி கணக்கில் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, பல்வேறு தொண்டு இயக்கங்களை பிரதிபலிக்கும் “தமிழ்நாடு அலையன்ஸ்” சார்பில் கையெழுத்து இயக்கம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

உழைப்பாளிகளின் உரிமைகளை முன்னிறுத்தி,ஆகஸ்ட் 14 முதல் ஆகஸ்ட் 31, 2020 வரை இக் கையெழுத்து இயக்கம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. (தொடர்புக்கு.. 9444976932, 72004 81878)

இதற்கு தகுதியானவர்களை ரேஷன் அட்டை, ஆதார் அட்டை, அமைப்பு சார நல வாரியங்களின் தரவுகள், உள்ளாட்சி அமைப்புகளின் தகவல்கள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு மத்திய அரசு தீர்மானிக்க வேண்டும் என்ற இவர்களது கோரிக்கை முற்றிலும் நியாயமானது.

இக்கோரிக்கையை மனிதநேய ஜனநாயக கட்சி ஆதரிப்பதோடு, அனைவரும் இதற்கு ஆதரவாக கையெழுத்திட்டு இக்கோரிக்கையை வலுப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.

இவண்,
#மு_தமிமுன்_அன்சாரி_MLA,
#பொதுச்செயலாளர்,
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
19.08.2020