குடியாத்தம் நகராட்சி பொறுப்பு ஆணையரிடம் மஜக மனு..!

ஆகஸ்ட்.19.,

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சி பொறுப்பு ஆணையர் சிசில் தாமஸ் அவர்களிடம் அடிப்படை வசதி வேண்டி மனிதநேய ஜனநாயக கட்சியின் குடியாத்தம் நகரச் செயலாளர் எஸ்.அனீஸ் அவர்கள் கோரிக்கை மனு அளித்தார்.

மனுவில் கூறியிருப்பதாவது..

குடியாத்தம் நகரம் 8-வது வார்டு அசேன் தெரு, சக்தி நகர், ஆகிய பகுதிகளில் புதிய தார் சாலைகள் அமைத்து வேண்டியும், குடியாத்தம் நகரம் 8- வது வார்டு அசேன் தெரு, சக்தி நகர், பகுதிகளில் மழைக்காலத்தில் மழைநீர் வெள்ளம்போல் தேங்குகிறது அதனை சீர்செய்ய புதிய கழிவு நீர் கால்வாய்கள் அமைத்து தர வேண்டியும், 36-வது வார்டு தங்கம் நகர் ராகவேந்திரா தெரு, கழிவுநீர் கால்வாய்கள் அமைத்து தர வேண்டியும், குடியாத்தம் நகரத்தில் சுற்றியுள்ள 36-வார்டுகளிலும் மழைக்காலம் என்பதால் கழிவுநீர்க் கால்வாய்களை தூர்வார வேண்டியும்.

மேற்கண்ட கோரிக்கைகள் அனைத்தும் தாங்கள் நேரில் ஆய்வு பணிகள் செய்து, மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இச்சந்திப்பில் மாவட்டப் பொருளாளர் I.S.முனவ்வர் ஷரிப், 2-வார்டு கிளை செயலாளர் மஸ்தான், சக்தி நகர் சேர்ந்த மல்லிகா ஆகியோர் உடனிருந்தனர்.

தகவல் ;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#வேலூர்_மாவட்டம்
18.08.2020