வி.பி.சிங் புகழ் ஓங்கட்டும்…

இந்த நாளில், 1990-ஆம் ஆண்டில், நாடாளுமன்றத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு, நடுவண் அரசின் வேலை வாய்ப்பில், மண்டல் குழு பரிந்துரையின் அடிப்படையில் 27 விழுக்காடு அளிக்கப்படும் என்கிற ஆணையை, அன்றைய பிரதமர், சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் அறிவித்த நாள்.

இதனை அறிவித்தது மட்டுமன்றி, இந்த சமூக நீதி அறிவிப்பு என்பது, தந்தை பெரியார், அம்பேத்கர், லோகியா ஆகியோரது கனவை நனவாக்கும் செயல் என பெருமைபட அறிவித்தார் வி.பி.சிங்.

இன்று நாடு முழுவதும், பிற்படுத்தப்பட்டோர் நடுவண் அரசு, பொதுத்துறை, வங்கிகள் என அனைத்திலும் வேலை வாய்ப்பு பெறுவதற்கு வாய்ப்பளித்த வி.பி.சிங் அவர்களை, அனைவரும், குறிப்பாக, பிற்படுத்தப்பட்டோர் மறந்திடக் கூடாது.

இன்று சமூக நீதிக்கு ஏற்பட்டிருக்கும் பல்வேறு விதமான சவால்களையும், தடைகளையும் உடைத்தெறிந்திட, இந்நாளில் உறுதி ஏற்போம்

வி.பி.சிங் அவர்களை திட்டமிட்டு பலரும் மறக்கடிக்கிறார்கள்,இருட்டடிப்பு செய்கிறார்கள்.அதை தாண்டி வி.பி.சிங் அவர்களுடைய சமூக நீதி பணிகளை மக்களிடம் தொடர்ந்து முன்னேடுப்போம்.

இவண்

M.தமிமுன் அன்சாரி MLA
மனிதநேய ஜனநாயக கட்சி
7_08_16