ஜூலை.10., மனிதநேய ஜனநாயக கட்சியின் சேவை அரசியலின் பால் ஈர்க்கப்பட்டு தமிழகம் முழுவதும் கடந்த ஒரு மாதமாக சாரை சாரையாக இளைஞர்கள் தன்னெழுச்சியாக மஜகவில் இணைந்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரி மாவட்டத்தில் இருபதிற்கும் மேற்பட்ட இளைஞர்கள் தங்களை கட்சியில் இணைத்துக் கொண்டனர். மாவட்டச்செயலாளர் பிஜ்ரூள் ஹபீஸ் மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர் ரூபீகர் அலி ஆகியோர் முன்னிலையில் புதிதாக இணைந்தவர்களுக்கு மஜக உறுப்பினர் அட்டைகள் வழங்கி கட்சியின் கொள்கை மற்றும் செயல்பாடுகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இந்நிகழ்வில், மஜக மாவட்ட நிர்வாகிகள், அணி நிர்வாகிகள் உடனிருந்தனர். தகவல், #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJKitWING #கன்னியாகுமரி_மாவட்டம். 10/07/2020
இஸ்லாமிய கலாச்சார பேரவை
தொண்டியில் கஞ்சா கும்பல் பிடிபட்டது..துரித நடவடிக்கை எடுப்பதாக கருணாசு MLA உறுதி..!
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் கஞ்சா, அபின் போன்ற போதை பொருட்கள் விற்பனை செய்து வந்த கும்பல் ஒன்று பிடிபட்டது. அக்கும்பலை பிடிக்க பெரிதும் உதவிய தொண்டியை சேர்ந்த இளைஞர்கள் மீதும் காவல்துறையினரால் பொய்வழக்கு புனையப்பட்டுள்ளது. போதை பொருட்கள் விற்பனை செய்து வந்த கும்பலை பிடிக்க உதவிய இளைஞர்களை பாராட்டாமல், அவர்கள் மீது வழக்குத் தொடுப்பது எந்த விதத்தில் நியாயம் என்று ஊர் பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். இந்நிலையில் போதை பொருட்கள் விற்பனை செய்த கும்பல் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், இளைஞர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கை வாபஸ் பெறவும் உதவுமாறு மஜக துணைப் பொதுச்செயலாளர் மண்டலம். ஜெய்னுல் ஆபீதின் அவர்கள், பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்களிடம் வலியுறுத்தினார். அவர் இது குறித்து திருவாடனை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், முக்குலத்தோர் புலிப்படை தலைவருமான கருணாஸ் MLA., அவர்களிடம் உரிய நடவடிக்கை எடுக்க உதவுமாறு கேட்டுக் கொண்டார். அதன் அடிப்படையில் இன்று காலை தொண்டிக்கு வருகை தந்த கருணாஸ் MLA., அவர்கள், ஐக்கிய ஜமாத் மற்றும் பொதுமக்களிடம் விபரங்களை கேட்டறிந்தார். பிறகு இது குறித்து மாவட்ட காவல் துறை மற்றும் மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கும் கொண்டு சென்று
ஜூலை 10 வேலூர் புரட்சி நாள்… மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA அவர்களின் சமூக இணையதள கட்டுரை
ஐரோப்பியர்களுக்கு எதிரான விடுதலைப் போரில் ஆயுதக் கிளர்ச்சிகள் மூலம் நடைப்பெற்ற வீரம் செறிந்த ரத்த வரலாறுகள் ஏராளம். அதில் வேலூர் புரட்சி முதன்மையானது. 1806 ஆம் ஆண்டு இதே ஜூலை 10 ஆம் நாளில் தான் முதல் இந்திய சுதந்திரப் போராட்டம் நடைப்பெற்றது. அதை சிப்பாய் கலகம் என ஆங்கிலேயர் வர்ணித்தனர். ஆனால் வரலாற்று ஆசிரியர்கள் அதை முதல் இந்திய சுதந்திப் போராட்டம் என திருத்தினர். விடுதலைப் போராளி திப்பு சுல்தானின் உயிர் தியாகத்திற்கு பிறகு அவரது குடும்பத்தினர் வேலூர் கோட்டையில் ஆங்கிலேயர்களால் சிறை வைக்கப்பட்டனர். விழிகளில் விடுதலை நெருப்பையும், இதயத்தில் வீரத்தையும் கொண்டிருந்த அவரது பிள்ளைகள் பிரிட்டனின் துரைத்தனத்திற்கு அடங்கிப்போக தயாராக இல்லை. மானமா? சமாதானமா? என்றால் மானமே முக்கியம் என முழங்கினார்கள். சிறைப்பட்டாலும் சீற்றம் தணியவில்லை. பாட்டனார் ஹைதர் அலியின் தியாகமும், தந்தை திப்பு சுல்தானின் தீரமும் அவர்களை வழி நடத்தியது. தங்கள் தாகம் சுதந்திர நாடே என உறுமினர். தாங்கள் சிறை வைக்கப்பட்டிருந்த கோட்டையிலேயே ஆங்கிலேயருக்கு எதிரான புரட்சியை தொடங்குவது என அவர்கள் தீர்மானித்தனர். இதற்கு முன்னோட்டமாக அவர்கள் எடுத்த முடிவு துணிச்சல் மிக்கது. தியாகப்பூர்வமானது. தங்கள் சகோதரிக்கு திருமணம் நடத்த முடிவு செய்தனர். ஜூலை 9
தஞ்சை திருவையாறு ஒன்றியத்தில் மஜக எழுச்சி!கண்டியூரில் புதிய கிளை!
ஜூலை.10, தஞ்சை மாநகர் மாவட்டத்திற்குட்பட்ட திருவையாறு ஒன்றியம், திருப்பந்துருத்தியில் மஜக நிர்வாகம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. திருப்பந்துருத்தி மஜகவினரின் செயற்பாடுகளை கண்ட அப்பகுதியைச் சேர்ந்த பலர் திருவையாறு ஒன்றிய செயலாளர் சேட்டாம்பி என்கிற S. ஹபீப்ரஹ்மான் முன்னிலையில் தங்களை மஜகவில் இணைத்து கொண்டனர். மேலும், அருகில் உள்ள கண்டியூரிலும் தன்னெழுச்சியாக இணைந்தவர்களை கொண்டு புதிய கிளை நிர்வாகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வுகளில் திருப்பந்துருத்தி நகரச் செயலாளர் முகமது காலித், பொருளாளர் அசார், துணைச் செயலாளர் பாரிஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இந்த வாரத்தில் மட்டும் தமிழகமெங்கும் ஐந்திற்கு மேற்பட்ட புதிய கிளைகளும், சுமார் 250 க்கும் அதிகமானோர் தங்களை மனிதநேய ஜனநாயக கட்சியில் இணைத்து கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #திருவையாறு_ஒன்றியம் #தஞ்சை_மாநகர்_மாவட்டம். 09/07/2020
இறந்த உடலைப் பெற்று சொந்த ஊருக்கு அனுப்பி வைத்த மஜக!
ஜூலை.09, தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்த மயிலாடுதுறையை சேர்ந்த சகோதரரின் உடலை பெற்று அனுப்பி வைக்கும் படி குவைத் மண்டல நிர்வாகிகள் தஞ்சை மாநகர் மாவட்ட செயலாளர் அகமது கபீரை தொடர்புக் கொண்டு கோரிக்கை விடுத்தனர். தகவலறிந்து களத்திற்கு விரைந்த மஜகவினர், உறவுகள் அறக்கட்டளையினருடன் இணைந்து மருத்துவமனை அலுவலர்களை தொடர்பு கொண்டு பேசினர். விரைவாக உடலை எடுத்து செல்ல தேவையான ஏற்பாடுகளை செய்தனர். அதனை தொடர்ந்து உறவுகள் அறக்கட்டளை நிர்வாகிகளும் தன்னார்வலர்களுமான சதாம் உசேன், ஆலம்கான் ஆகியோர் உடன் மயிலாடுதுறைக்கு உடலை ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். தகவல் ; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #தஞ்சை_மாநகர்_மாவட்டம்.