ஈரோடு கிழக்கு மாவட்ட மஜக இளைஞரணி ஆலோசனை கூட்டம்!

மனிதநேய ஜனநாயக கட்சி ஈரோடு கிழக்கு மாவட்ட இளைஞர் அணியின் ஆலோசனை கூட்டம் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் திலீப் குமாா், அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக மாநில துணை செயலாளர் பாபு ஷாஹின்சா, மாவட்ட செயலாளர் சபீக் அலி, மாநில செயற்குழு உறுப்பினர் இஹ்சானுல்லாஹ், ஆகியோர் பங்கேற்று ஜன 8 கோவை சிறை முற்றுகை போராட்டத்தில் இளைஞரணியின் பணிகள் குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினர்.

மேலும் வீடு தோறும் சென்று துண்டு பிரசுரம் மூலம் போராட்டத்திற்கு அழைப்பு விடுப்பது எனவும், திரளான மக்களை இந்த போராட்டத்தில் பங்கேற்க செய்ய வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டது.

இதில் அக்ரஹார பகுதி செயலாளா் பொறியாளா் ஜாவித், இளைஞரணி உசேன், தினகரன், பூபதி, இப்ராஹிம், மா பாஷா, மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

#கோவையில்_திரள்வோம்
#நீதியை_வெல்வோம்
#ReleaseLongTermPrisnors

தகவல்

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#ஈரோடு_கிழக்கு_மாவட்டம்
27.12.2021