ஜூலை.16., திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று பரவி வரும் நிலையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுர குடிநீரை திருவண்ணாமலை நகர மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் நகரின் பல்வேறு பகுதிகளில் நகரச் செயலாளர் G.அக்பர் அவர்கள் தலைமையில் நகரப் பொருளாளர் H.அம்ஜத் கான் முன்னிலையில் காவல் துறையினர், துப்புரவு பணியாளர்கள் உட்பட பொதுமக்கள் பலருக்கும் கபசுர குடிநீர் மற்றும் முகக்கவசங்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்டப் பொருளாளர் சையத் அலி அவர்கள் நிகழ்வை துவக்கி வைத்தார், IKP மாவட்ட செயலாளர் சையத் இப்ராஹிம் மற்றும் H.அமிர் கான் ஆகியோரும் உடன் கலந்து கொண்டனர். தகவல்; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி, #MJK_IT_WING. #திருவண்ணாமலை_மாவட்டம் 16-07-2020
இஸ்லாமிய கலாச்சார பேரவை
MKP கத்தார் மண்டலத்தின் தொடர் மனிதநேய சேவைகள்..!
ஜூலை.16, மனிதநேய ஜனநாயக கட்சியின் அயல்நாட்டு பிரிவான மனிதநேய கலாச்சாரப் பேரவையின் (MKP) சார்பாக கத்தாரில் சிக்கித் தவித்த தமிழர்கள் தாயகம் திரும்பிடும் வகையில், இரண்டாம் கட்டமாக MKP கத்தார் மண்டலம் சார்பாக வந்தே பாரத் திட்டத்தில் திருவனந்தபுரம் (கேரளா), சென்னை ஆகிய விமான நிலையங்களுக்கு பயணசீட்டுகள் முன்பதிவு செய்து கொடுக்கப்பட்டது. மேலும், திருவனந்தபுரம் வந்திறங்கும் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு குமரி மாவட்ட மஜக-வினர் அத்தியாவசிய உதவிகளை செய்து கொடுத்து அவர் அவர் சொந்த மாவட்டங்களுக்கு செல்ல இ-பாஸ் ஏற்பாடு செய்து அனுப்பி வைக்கப்படுகின்றனர். இன்று தாயகத்திற்கு செல்லும் தமிழர்களை வழியனுப்பும் நிகழ்வில், மாநில செயற்குழு உறுப்பினர் கீழக்கரை ஹூசைன், மண்டல பொருளாளர் நாகை பரமானுல்லா, துணைச் செயலாளர்கள் ஆயங்குடி யாசீன், சிதம்பரம் நூர் அஹமத், மண்டல ஆலோசகர் பரங்கிப்பேட்டை ரஜ்ஜாக் ஆகியோர் கலந்து கொண்டனர். தகவல், #மனிதநேயகலாச்சாரப்பேரவை #MKPitWING #கத்தார்_மண்டலம்.
கொரோனா தொற்றால் உயிரிழந்த உடல் நல்லடக்கம்! காயல் மஜகவின் மானுட சேவை!
காயல்பட்டினத்தைச் சேர்ந்தவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் நேற்று அவர் உயிரிழந்தார். அவரது குடும்பத்தினர் கேட்டு கொண்டதற்கிணங்க தூத்துக்குடி அரசு மருத்துவமனையிலிருந்து மஜக வின் மாநில துணைச்செயலாளர் A.R.சாகுல் ஹமீது தலைமையில் உடலைப் பெற்று குடும்பத்தினருடன் இணைந்து மஜகவினர் அரசின் பாதுகாப்பு நெறிமுறைகளைப் பேணி உடலை நல்லடக்கம் செய்தனர். தகவல், #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJKitWING #காயல்பட்டினம்_நகரம். 15/07/2020
வெளிநாட்டு தப்லீக் பயணிகள் ஹஜ் இல்லதுக்கு மாற்றம், மஜகவினர் சந்தித்து உதவி வழங்கினர்
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் தன்னெழுச்சியாக மஜகவில் இணையும் இளைஞர்கள்.!
தென்காசி: ஜூலை.15., மனிதநேய ஜனநாயக கட்சியின் சேவை அரசியலின் பால் ஈர்க்கப்பட்டு தமிழகம் முழுவதும் கடந்த ஒரு மாதமாக சாரை சாரையாக இளைஞர்கள் தன்னெழுச்சியாக மஜக வில் இணைந்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்த இளைஞர்கள் தங்களை மஜகவில் இணைத்துக் கொண்டனர். மாவட்டச்செயலாளர் பீர் மைதீன், முன்னிலையில் புதிதாக இணைந்தவர்களுக்கு மஜக உறுப்பினர் அட்டைகள் வழங்கி கட்சியின் கொள்கை மற்றும் செயல் பாடுகள் குறித்து எடுத்து ரைக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர் வாவை இனாயத்துல்லாஹ், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #தென்காசி_மாவட்டம் 15/07/2020