MKP கத்தார் மண்டலத்தின் தொடர் மனிதநேய சேவைகள்..!


ஜூலை.16,

மனிதநேய ஜனநாயக கட்சியின் அயல்நாட்டு பிரிவான மனிதநேய கலாச்சாரப் பேரவையின் (MKP) சார்பாக கத்தாரில் சிக்கித் தவித்த தமிழர்கள் தாயகம் திரும்பிடும் வகையில், இரண்டாம் கட்டமாக MKP கத்தார் மண்டலம் சார்பாக வந்தே பாரத் திட்டத்தில் திருவனந்தபுரம் (கேரளா), சென்னை ஆகிய விமான நிலையங்களுக்கு பயணசீட்டுகள் முன்பதிவு செய்து கொடுக்கப்பட்டது.

மேலும், திருவனந்தபுரம் வந்திறங்கும் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு குமரி மாவட்ட மஜக-வினர் அத்தியாவசிய உதவிகளை செய்து கொடுத்து அவர் அவர் சொந்த மாவட்டங்களுக்கு செல்ல இ-பாஸ் ஏற்பாடு செய்து அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

இன்று தாயகத்திற்கு செல்லும் தமிழர்களை வழியனுப்பும் நிகழ்வில், மாநில செயற்குழு உறுப்பினர் கீழக்கரை ஹூசைன், மண்டல பொருளாளர் நாகை பரமானுல்லா, துணைச் செயலாளர்கள் ஆயங்குடி யாசீன், சிதம்பரம் நூர் அஹமத், மண்டல ஆலோசகர் பரங்கிப்பேட்டை ரஜ்ஜாக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தகவல்,
#மனிதநேயகலாச்சாரப்பேரவை
#MKPitWING
#கத்தார்_மண்டலம்.