#மஜகபொதுச்செயலாளர்.! உலகம் முழுக்க கொண்டாடப்படும் மிகப்பெரிய பண்டிகைகளில் ஒன்று கிறிஸ்துமஸ் பெருவிழாவாகும், நம் இந்திய திருநாட்டில் இப்பண்டிகை மிகவும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இந்திய மண்ணில் ஆரம்ப கல்வியையும், உயர்கல்வியையும் வளர்த்தெடுத்தவர்கள் கிறித்தவ பெருமக்கள் என்பது மகிழ்ச்சிகுறிய செய்தியாகும். வாய்ப்புகளும் வசதிகளும் அற்ற குக்கிராமங்களில் கூட சேவை நிறுவனங்களை அமைத்து, மக்களுக்கு தொண்டாற்றி வரும் அவர்களின் பணிகளை எல்லோரும் பாராட்டுகின்றனர். தமிழ் மொழிக்கும், தமிழக மக்களுக்கும், அன்றும், இன்றும் கிறித்தவ சேவை நிறுவனங்கள் ஆற்றி வரும் சேவைகள் எண்ணிலடங்காதது, இன்று நமது நாட்டில் பாசிச சக்திகள் பிரித்தாளும் சூழ்ச்சிகளை மக்களிடம் திணித்து வரும் சூழலில், அவற்றை ஜனநாயக சக்திகளோடு இணைந்து கிறித்தவ மக்கள் எதிர்த்து செயலாற்றி வருவது பாராட்டுக்குரிய சேவையாகும். அந்த உறவுக்குரிய மனநிலையில்தான், புதிய குடியுரிமை திருத்த சட்டத்தில் (CAA) நேபாளம் மற்றும் பூடானில் வழிபாட்டுரிமை பறிக்கப்படும், கிறித்தவர்களுக்கும் அகதிகளுக்கான வாய்ப்புகளை தர வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சி வாதாடி, போராடி வருகிறது என்பதையும் இத்தருணத்தில் நினைவூட்டுகிறோம். நமது நாட்டின் ஜனநாயகத்தையும், வளங்களையும் பாதுகாக்க இந்துக்களும், முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும், தலித்துகளும் அண்ணன் தம்பிகளாக இணைந்து நின்று பணியாற்ற இந்நன்னாளில் உறுதி
அறிக்கைகள்
மஜக சேலம் மாவட்டசெயல் வீரர்கள் கூட்டம்..! தலைமை நிர்வாகிகள் பங்கேற்பு
சேலம்.டிசம்பர்.16.., மனிதநேய ஜனநாயக கட்சியின் சேலம் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் இன்று மாவட்டச் செயலாளர் மஹபூப் அலி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட பொருளாளர் O.S. பாபு வரவேற்புரை நிகழ்த்தினார். இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக மாநிலப் பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது, தலைமை ஒருகிணைப்பாளர் மெளலா.நாசர், அவைத் தலைவர் நாசர் உமரி, மாநில துணைச் செயலாளர் பாபு ஷாஹின் ஷா, ஆகியோர் கலந்து கொண்டு கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்து உரையாற்றினர். இறுதியாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத்தில் திருத்ததில் ஈழ தமிழர்களையும், அண்டை நாட்டு இந்திய வம்சாவளி முஸ்லிம்களையும், நேபாளத்திலிருந்து வரும் கிறிஸ்தவர்கள் உள்ளிட்டவர்களை புதிய குடியுரிமை சட்டத்தில் குடியுரிமை வழங்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்ற பட்டது. மாவட்ட துணைச் செயலாளர் சனாவுல்லாஹ் கான் நன்றி கூறினார். இந்நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர் சாதிக் பாஷா, மாவட்ட துணைச் செயலாளர்கள் அஸ்லாம், சர்புதீன் உள்ளிட்ட மாவட்ட, நகர, கிளை நிர்வாகிகள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தகவல்; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #சேலம். 16-12-2019
ஜாமியாமில்லியா மாணவர்கள் மீது டெல்லி போலீஸ் நடத்தியது அரசுவன்முறை, முதமிமுன் அன்சாரி MLA கடும் கண்டனம்
#மஜகபொதுச்செயலாளர்முதமிமுன்அன்சாரி_MLAகடும்_கண்டனம்..! சென்னை.டிசம்பர்.16.., மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் புதிய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடெங்கும் போராட்டங்கள் நடைப்பெற்று வரும் நிலையில், நேற்று அமைதியாக போராடிய ஜாமியா மில்லியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது டெல்லி போலீஸ் காட்டுமிராண்டித் தனமாக தாக்குதல் நடத்தியுள்ளது. காவல்துறையே வாகனங்களை எரித்து, அந்த பழியை மாணவர்கள் மீது போட்டு, வன்முறையை திட்டமிட்டு உருவாக்கியிருப்பது பேரதிர்ச்சியை தருகிறது, பல்கலைக்கழக துணை வேந்தரின் அனுமதியில்லாமலேயே. அத்துமீறி பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்து போலீஸ் அராஜகங்களை அரங்கேற்றியிருக்கிறது. விடுதிகளுக்குள் நுழைந்து மாணவர்களை சகட்டுமேனிக்கு அடித்து படுகாயப்படுத்தியதோடு, மாணவிகளின் விடுதிகளுக்குள்ளும் நுழைந்து தாக்கியிருக்கிறார்கள். மாணவிகளை மானபங்கம் செய்யவும் முயன்றதாக வரும் செய்திகள், நாம் ஜனநாயக நாட்டில் தான் இருக்கிறோமா.? என்ற ஐயத்தை எழுப்புகிறது. தங்களின் மனித உரிமை மீறல்கள் வெளியே தெரிந்து விடக் கூடாது என்பதற்காக, விளக்குகளை அணைத்து விட்டு தாக்குதலை நடத்தியிருப்பது டெல்லி போலீஸின் கொடூர முகத்தை காட்டுகிறது. அத்துடன் முகத்தை மறைத்தப்படி, சமூக விரோதிகளும் போலீஸ் துணையோடு பல்கலைக்கழகத்துக்குள் நுழைந்து வன்முறை நிகழ்த்தியிருப்பது, அதன் பின்னணிகளும் ஃபாசிச கும்பலின் சதித் திட்டங்களை வெளிக்காட்டுகிறது. மேலும் இதை படம் பிடித்த, பத்திரிக்கையாளர்களையும் கடுமையாக தாக்கியிருக்கிறார்கள். மத யானை வெறிப்பிடித்து, நாசத்தை ஏற்படுத்தியது போல,
ஆட்டோவில் தவறவிட்ட 10 பவுன் நகையை ஒப்படைத்த மஜக வினருக்கு பாராட்டு
கோவை.டிச.14.., மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பு அமைப்பான மனிதநேய ஜனநாயக தொழிற் சங்கம் (MJTS) சார்பாக கோவை மாநகர் முழுவதும் புதிய பாதை என்ற பெயரில் மீட்டர் ஆட்டோ சேவை நடைபெற்று வருகிறது, MJTS ஆட்டோ ஒன்றில் நேற்று மாலை ஒரு தம்பதியினர் பயணம் செய்யும் போது தன் 10 சவரன் நகை இருந்த கைப் பையை ஆட்டோவிலேயே தவற விட்டு சென்றுவிட்டனர். இரவு பணி முடிந்து ஆட்டோவை நிறுத்தும் போது MJTS ஆட்டோ ஓட்டுனரான காளிதாஸ் பின் இருக்கைக்கு பின்னால் கைப்பை இருப்பதை பார்த்து திறந்து பார்த்துள்ளார். அதில் நகைகள், பணம் உள்ளிட்டவை இருந்துள்ளது, யார் விட்டு சென்றது என்று தெரியாமல் உடனே மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் கைப்பையை ஒப்படைத்துள்ளார். தாமதமாக தாங்கள் வைத்து இருந்த நகை பையை காணவில்லை என்பதை அறிந்து அந்த தம்பதியினர் தேட தொடங்கியுள்ளனர். கோவையை பொருத்த வரை MJTS மீட்டர் ஆட்டோ என்பது அனைவரும் அறிந்து நம்பிக்கையுடன் செல்லும் ஒரு ஆட்டோ, தங்கள் பையை ஆட்டோவில் தான் விட்டுள்ளோம் என்பதை உறுதி செய்து உடனடியாக
தேசிய குடியுரிமை திருத்தச் சட்டம்: இந்தியாவின் பாரம்பரியத்திற்கு ஏற்பட்ட வரலாற்று அவமானம் மு தமிமுன் அன்சாரி கடும் கண்டனம்
இன்று நாடாளுமன்றத்தில் தேசிய குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கிடையே மத்திய பாஜக அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியிருக்கிறது. பாகிஸ்தான்,பங்களாதேஷ், ஆப்கனிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு வந்த அகதிகள் 5 ஆண்டுகள் தங்கியிருந்தால்,உரிய மூல ஆவணங்கள் இல்லாவிடினும்,அவர்கள் இந்திய குடியுரிமை பெறலாம் என புதிய சட்டம் கூறுகிறது. இதில் இந்து, பெளத்தர், சீக்கியர், ஜைன, கிரித்தவர் உள்ளிட்டோர் அடங்குவர் என கூறியிருப்பதில் மாற்று கருத்துகள் இல்லை. ஆனால் இதில் முஸ்லிம்களையும், இலங்கை தமிழர்களையும் சேர்க்காதது ஏன்? என்ற கேள்வி வலிமையாக எழுகிறது. பங்களாதேஷ் சுதந்திர நாடாக உருவானபோது அங்கு சென்ற வங்கம், அஸ்ஸாமி, பீகாரி, ஒரிய மொழி பேசும் முஸ்லிம்கள் மீண்டும் தங்கள் தாய் நாடு திரும்பினர். இப்போது அவர்களின் நிலை என்ன? அவர்கள் இந்திய முஸ்லிம்களாக பிறந்தது தான் குற்றமா? என்ற கேள்விகள் முக்கியமானவை. அது போல் இலங்கை தமிழர்கள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக மண்ணில் அகதிகளாக வாழ்கின்றனர். அவர்கள் இந்திய குடியுரிமை கேட்டு வரும் போது, அவர்களும் புறக்கணிக்கப்பட்டிருப்பது யாரை திருப்திப்படுத்த? என கேட்கின்றோம். அமெரிக்கா போன்ற நாடுகளை பகைக்க கூடாது என்பதற்காக கிரித்தவர்களை அப்பட்டியலில்